Sunday, November 28, 2010

(அ).திருமணத்திற்கு பிறகு அம்மா


சராசரி கிராமத்து பெண்ணை திருமண பந்தம் நாகை  மாவட்டத்திற்கு   அழைத்து வந்தது. தன்னுடைய   கிராமத்திலிருந்து வரும்போது என் அம்மாவின் மனது பட்ட வேதனைகளை பெண்கள் அனைவராலும் அறிய முடியும்."ராஜாமணி  வீட்டை விட்டு போவது என் தாத்தாவுக்கு ஒரு கை இல்லாதது போல " என்றாராம் ஊர் பெரியவர் ஒருவர்.
                            ஒரு மணி நேர பயணம் கூட செய்யாதவர் ஏழு மணி நேர பயணம், அதுவும் பெற்றோரின் பிரிவு,உணவு,உடை,பழக்க வழக்கங்களில் சற்றே நாகரிகம்,புது மனிதர்கள் , உறவினர்கள் ,பேசும் தமிழ்  ஸ்லங் ல் வித்யாசம்,சமையல் செய்யும்   விதம் மாறுபாடு இப்படி  எல்லாவற்றிலும்  புதுமை !
              தன்னுடைய திறமையினாலும் ஆர்வத்தினாலும்  மேல்  சொன்ன      எல்லா மாற்றங்களையும் விரைவில் எளிதில் கற்றுக்கொண்டவர். அன்பான பொறுப்பான கணவர் கிடைத்தாலும்  உறவினர்களால்  பிரைச்சனை என்று மட்டுமே  கூற விரும்புகிறேன்.
              
                      என் தாத்தா வீட்டில் கிடைத்த ஒன்றை தவிர      இங்கு எல்லாம் கிடைத்தது...அது நிம்மதி.     என்று நாகபட்டினத்தில் காலடி எடுத்து வைத்தார்களோ ஆன்றே அந்த நிம்மதி என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேட வந்துள்ளார் என்பது எனக்கு மட்டுமே புரிந்த ஒன்று . நேரம் கிடைக்கும் போதெல்லாம் என் அம்மா தன்னுடைய கடந்த கால  நிகழ்வுகளை சொல்லும்போது கொஞ்சம் தன்னம்பிக்கையும்,இரக்க உணர்வும் தான் வரும்


 .                         அம்மாவின் கல்வியறிவு குறைவு என்றாலும் தன் ஆர்வத்தினால்  தமிழில் படிக்க எழுத கற்றுக்கொண்டவர்.சிறு பிள்ளைபோல சற்று கிறுக்கலாக எழுதும் என் அம்மாவின் கையெழுத்து  எனக்கு மிக பிடித்த மறக்கக முடியாத ஒன்று.என் அம்மா திறமைசாலி மட்டும் அல்ல மிகுந்த பொறுமைசாலி ஸ்ட்ரைட்  பார்வடு, ஒரு மனதாக  எதையும் முடிவேடுக்கமட்டார்  . இதுவே என்  அம்மாவின் பலவீனம் .நல்லபடியாக இருந்தால் கூட  இப்படி இருந்திருக்கலாமோ, அப்படி   இருந்திருக்கலாமோ என குழம்புவார்,எனது  குடும்ப சூழ்நிலையும்  அதற்கு காரணந்தான். மொத்தத்தில்  தைரியசாலி அல்ல , ரொம்ப  சென்சிடிவ்.


                          அம்மா நல்ல சுவையாக சமையல் செய்வார்,கூடை பின்னுவது,தையல்,அலங்கார் பூக்கள்  செய்வது,கை வினை பொருட்கள் செய்வது அதாவது ஒரு முறை பார்த்தவுடன் கவனமாக புரிந்துகொள்வர்,ஒரு வேலை செய்தல் சுத்தமாக, விரைவில்   செய்து முடிப்பது,வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வது,மற்றவர்களிடம் அன்பான முறையில் பழகுவது,தன்னால் முடிந்த உதவிகளை செய்வது,விருந்து உபசரிப்பு,குறிப்பாக கடவுள் நம்பிக்கை  .....இன்னும் பல நல்ல முறைகளில் எல்லாமே எனக்கு என் அம்மாவிற்கு இணை என் அம்மாதான் என்று சொல்லுவேன்.

                        உறவினர்களால்   பல பிரச்சனைகளை   சந்தித்த என் அம்மாவுக்கு   திருமணமாகி முன்று வருடம் வரை   குழந்தை   இல்லாத பிரச்சனையும் கூட,பல பாட்டி வைத்தியங்களுக்கும் ,கடவுள் பிராத்தனைகளுக்கும் பிறகு 15 /01 / 1982  மாட்டுப் பொங்கல்   அன்று தன் வைற்றிலிருந்து  இந்த  உலக  மடியில்  இறக்கி வைத்தாலும்  தன்  கடைசி  மூச்சு  நினைவு  வரை என் அம்மாவுக்கு எல்லாமே நான்தான், நான்தான் என் அம்மாவின்  உலகம்.இந்த வார்த்தைகளை என்னால்  தொடர்ந்து டைப் செய்ய   முடியவில்லை,பல முறை  துக்கம்  தொண்டையை   அடைப்பதை  உணர்ந்த எனக்கு இப்போது  கையும்  கட்டி வைத்தது   போல் உள்ளது,  இன்னும்  கண்ணீரும் வற்றவில்லை என்பதையும்   உணருகிறேன்.


                   என் முகத்தை பார்த்தபின் என் அம்மாவுக்கு   எல்லாவித இன்பங்களும்   கிடைத்துவிட்ட   திருப்தி, என் மீது   அளவற்ற பாசம், பொசசிவ்னஸ்  என்றும் சொல்லலாம், கண் மூடித்தனமான பாசம், எல்லாம் என் 29  வயது   முடிவதற்குள்   கொடுத்துவிட்டு   மீதமுள்ள என் வாழ்நாட்களில்  அந்த பாசத்திற்காக  ஏங்கவும், இத்தனை ஆண்டுகள்  தாய் பாசத்தை  அந்த   ஸ்பரிச   உணர்வை   அனுபவிக்கவும்   வைத்தவர்.



                                      என் அம்மாவிற்கு நான் பிறந்ததிலிருந்தே உடல் நிலை சரி  இல்லை,அப்பாவின் பாசமிகு கவனிப்புடன் அப்படியும்  இப்படியும் மூன்று   வருட   காலங்கள்  ஓடியது.அம்மாவிற்கு அடுத்து  குழந்தை  பிறப்பில்  பிரச்சனை   வந்துவிட்டதாலும்,  சொத்துக்களை ஒரே இடத்தில்   சேமிக்கவும்   என்னை கவனிக்க  ஒருவர் தேவை  என்பதை  காரணமாகக்   கொண்டு    என் அப்பா, தத்தா, அம்மாச்சி, சித்தி {அம்மாவின் தங்கை)  விருப்பத்தில்  உறவினர்களின்  முன்னிலையில்  என்  அம்மாவின்  சம்மதத்துடன் (சம்மதிக்க வைத்து)  என் அம்மாவின் கண் முன்னரே தன் கணவரை தங்கையே  பங்கு  போட ஆரம்பித்த  நாள்  என் அப்பாவின்  இரண்டாவது  திருமணம்   சித்தியுடன் நடந்தது.
                   
                           நிகழ்காலத்து வியாதியை  குணபடுதினார்களே தவிர  எதிர்காலத்து  குழந்தை  பிரச்சனைக்கு மருத்துவ  தீர்வுக்கு பதில்  மறுமண  தீர்வே  எடுத்துள்ளார்கள்.  அன்றே அம்மா   உணர்வால் கொல்லப்பட்டார், அனால்  தன் உயிரை   எனக்காக மட்டுமே இத்தனை வருடங்கள் பல துன்பங்களிலும்    இன்பங்களிலும் எனக்காகவே  தன் கடைசி  முயற்சி  வரை  பிடித்து   வைத்திருந்தார் !!! 



                         அப்பா அரசாங்க ஊழியர், அப்பர் மிடில் கிளாஸ் குடும்ப வாழ்க்கை, எனக்கு   தங்கையும்   தம்பியும்  வந்தார்கள் (சித்தி பிள்ளைகள்)அப்பா   கஷ்டபட்டாலும் பிள்ளைகள் மூவரின்   மீதும் ஒரே மாதிரியான பாசம், துன்பங்கள் பல வந்து போனாலும் தூக்கத்தில் எழுப்பி கேட்டால் கூட எனக்கு ''ரெண்டு  பொண்ணு  ஒரு பையன்"என்று   சொல்லுமளவுக்கு   மனது   அப்பா, அம்மா, சித்தி மூவருக்கும். அதே  ஒற்றுமை   பிள்ளைகளிடமும்.
                           
                           அம்மா  தன் சுவாசத்துக்கு   இணையாக   கண்ணீரையும் விட்டுத்தான்  என்னை வளர்த்தார். சில  தாங்க முடியாத சூழ்நிலையில்  அம்மா தற்கொலை முயற்சியும் செய்துள்ளார், அப்பாதான் காப்பாற்றினார்.உன்னை தவிக்கவிட்டு போயிருப்பேனே  என்று தான் செய்த தவறால் அம்மா கதறியது  இன்னமும் என் காதில் ஒலிக்கிறது, இதையெல்லாம்  பார்த்தபோது  கண்கள்  அழுதாலும்  மனம்  வலுபெற்றது.   
                          அம்மா   என்னிடமிருந்து ஒரு  துளியளவு  கூட எதையும் எதிர்பர்க்கமட்டார், தன்னுடைய வாழ்நாட்களை   எனக்காக செலவிடுவதயும்   தன்னால்   முடிந்தவற்றை  எனக்கு   செய்வதே  அம்மாவுக்கு   திருப்தி.  அம்மாவிற்காக எதுவுமே செய்யவில்லையே என்று   வேதனைப்படுவேன், அம்மாவிடமிருந்து   பெறுபவளாகவே மட்டுமே   வாழ்ந்துள்ளேன்.
               
                                                                                                                                                                                                                                           

(ஈ) என் திருமணத்திற்கு பிறகு அம்மாவின் மகளாய்!!!

                                     அம்மாவின்   கண்ணீரில்   மிதந்துதான் வட இந்தியாவுக்கு வந்தததாக சொல்ல வேண்டும். அத்தனை  குழப்பங்கள், சங்கடங்கள், இப்போது நினைத்தாலும்  எப்படி   சமாளித்தோம், எங்கிருந்து  தைரியம்  வந்ததென   யோசிக்க வைக்கிறது. எங்களுக்கு  ஜூனியர்  பிறக்கும் வரை  அம்மாவின் நிலை  பரிதவிப்பாகவே  இருந்தது. ஆனாலும் அம்மாவிற்கு  தன்  மருமகனை பற்றியும்  மகள் வ.இந்தியாவில் குடும்பம்  நடத்துவது  பற்றியும்   பெருமையும் சந்தோஷமும்தான். அப்பாவிற்கும் எனக்கும்  சமாதானம்  ஆகும்  வரை அம்மா  எதிர் கொண்ட  சம்பவங்களுக்கும், சங்கடங்களுக்கும்   எந்த   ஜென்மத்திலும்  கைம்மாறு செய்யமுடியாது.  அப்பாவும்   கொடூரமானவர்   அல்ல, சமுதாய  சூழலுக்கும், என் எதிர் காலத்துக்காக்கவுமே அப்படி  நடந்து   கொண்டார்.

                               திருமணத்திற்கு பிறகு அம்மாவை விட்டு சென்றது வெகு தொலைவென்றாலும் மனதளவில் இத்தனை வருடங்களைவிட   ஒருவருக்கொருவர்  பேசிக்கொண்டதும்,  பழகிகொண்டதும், விசியங்களை  பரிமாறிக்கொள்வதும்  அதிகமாக இருந்தது.ஒரே வீட்டில் அம்மா அருகிலிருந்தபோது  கிடைத்த பாசத்தைவிட  மிக  அதிகமாக கிடைக்கபெற்றேன். எங்கள் பிரிவையும், தொலைவையும் இல்லாமல் ஆக்கியவர் யார் தெரியுமா? அந்த முக்கியமானவர் திருவாளர் செல்போன்தான். அம்மவிற்கென்று தனி மொபைல் வாங்கும் வரை டெலிபோன் பூத்துக்கு சென்று பேசி   பழக்கமில்லாதவர், எனக்காக கற்றுக்கொண்டார். std  பேசுவதற்காக  வீட்டிலிருந்து வந்து போகும் சிரமம் பற்றியும் சொல்வாங்க, எத்தனை  சிரமங்கள்  இருந்தாலும்  என்னிடம் 10  நிமிடம் பேசினால்தான்  நிம்மதியடைவாங்க. அம்மா செல்போன்  வாங்குவதற்கு முன் தம்பி, தங்கையிடம் ட்ரைனிங் எடுத்ததை   மறக்க முடியாது, அம்மவிற்கென்று  தனி  செல்போனே வந்தபிறகு  அம்மாவிற்கு ஒரு  பலமான  ஆதரவு  கிடைத்ததாக  சந்தோஷப்பட்டாங்க, ரீசார்ஜ்  செய்ய  அப்பாவையும், தம்பியையும் தேடினவங்க, தேவைப்படும்போது  தானே கடைக்கு  சென்று  ரீசார்ஜ் செய்யுமளவிற்கு என்னுடன் பேசும் ஆர்வத்தினால் முன்னேறினாங்க, நான் போன் செய்தால்கூட  நீ வை ஆட்சி நான்    பண்றேன்னு சொல்வாங்க,  இதற்கிடையில் நான் என் கணவரிடமும், அம்மா அப்பாவிடமும் அப்படி என்னதான் பேசுறிங்க, போனுக்கு   எவ்ளோ செலவு   பண்றதுன்னு   லேசான அர்ச்சனை   நடந்துகிட்டுதான் இருக்கும். அம்மாவை   நேராக  பார்க்க   முடியவில்லை என்ற   ஏக்கமும்   கூடவே   இருக்கும்.என்னை இன்னமும் குழந்தையாகவே நினைக்கும் அம்மாவிற்கு ஆர்தலளிக்கவே அன்பிற்குரிய கணவருடன் இருந்துகொண்டு அம்மாவுடன் இத்தனை கலந்துரையாடல்கள்,சொல்லப்போனால் அம்மாவுடன் போனில் பேசி  தனிமையை உணராமல் பார்த்துக் கொண்டதை தவிர அம்மாவிற்கு நான் வேறு எதுவும் செய்யவில்லை.எத்தனையோ பிரச்சனைகள் வந்த  போதும் அப்பாவை விட்டு பிரியாத அம்மா,மருமகனுடன்  மகள் மட்டும் வாழ்வதையே விரும்பினார் (மகள் பாசத்திற்காக மகளுடனே செல்ல விரும்பவில்லை)   
                            
                                            திருமணத்திற்கு முன் கணவரிடம்(காதலர்களாக இருந்தபோது) போனில்   அதை   சொல்லனும்,  இதை  சொல்லனும்னு  நினைப்பேன் , ஆனால் அவரிடம்   பேச  ஆரம்பித்தவுடன்  நான் சொல்ல வந்ததையும்,    பேச நினைத்ததும்  பாதிக்கு பாதி  மறந்துவிடும். அதே  போல  திருமணத்திற்கு பின்  அம்மாவிடம் நடந்தது.எங்களுக்குள் என்ன பேசுவோம் ------அம்மா "இப்படி சமைத்தேன்,இப்படி கமண்ட்ஸ் தந்தார் ,இது எப்படி சமைக்கணும்,எனக்கு சமையலே நல்லா வரமாடிங்குதும்மா,நாங்கள் அங்க போனோம் ,இங்க போனோம்,அதை பார்த்தேன் ,இதை பார்த்தேன்,இங்குள்ள வ.இந்தியர்கள் பற்றிய பழக்க வழக்கங்கள்,அம்மா தன்னுடைய தர்ம சங்கடங்களை பற்றி பேசுவது,உறவினர்கள்,தோழிகள் பற்றி பேசுவது,அம்மா எனக்காக கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்வது,எத்தனையோ முறை அம்மா எதாவது கோவிலுக்கு செல்லும்போது 'நான் இன்ன கோவிலுக்கு செல்கிறேன்,நீ அங்கிருந்து இந்த சாமியை கும்பிட்டுக்கோனு' சொல்லுவாங்க  நான் அமாவிடம் ஆலோசனை கேப்பது போல அம்மாவும் என்னிடம் சில விசயங்களுக்காக ஆலோசனை கேப்பாங்க.
                               
                       போனில் அம்மாவாசை, கிருத்திகை,பிரதோஷ நாட்களை அம்மாதான் நினைவு   படுத்துவாங்க, கோவில் மற்றும் வெளி இடங்களுக்கு   செல்லும்போது யாரவது விசாரித்தாங்கன்னா&யார் வீட்டு விஷத்துக்கு போறாங்க,யார் இறந்துட்டாங்க இப்படி எல்லா மேட்டரும் பேசுவோம்.இத்தனை பேசினாலும் இவையெல்லாம் வீட்டு வேலைகளை முடித்துட்டுதான்  பேசுவாங்க.எத்தனையோமுறை அம்மா போனை எடுத்ததும் சாபிட்டியாம்மானு கேட்டால் இப்பதான் ஆச்சி வேலைய முடிச்சிட்டு உக்காந்தேன்,உன்கிட்ட பேசிட்டு பிறகு சாப்பிடறேன்னு சொல்வாங்க.ஏம்மா  இப்டி பண்ற ,போய் சாப்டுட்டு பேசும்மானு போனை வச்சிடுவேன்.நாளடைவில் சில சின்ன,சின்ன விசியங்களை பேசும்போது சொல்ல மறந்துடுவோம்னு சின்ன விசியம்னாலும் உடனுக்குடன் போன் எடுத்து பேச ஆரம்பிச்சோம்.
                                         
                                            உணவில் அக்கரைஎடுத்துக்க  மாட்டாங்க,எதாவது பழங்கள்  சாபிடும்மா,சும்மா தோட்டத்தயே சுத்தம் செய்துட்ருக்காத,கை ,கால் வலிக்குதுன்னு சொல்லற ட்ரசலாம் கிடக்கட்டும்மா ஒருநாள் விட்டு தொவச்சிபோடும்மான்னா கேக்கமாட்டாங்க,எல்லா வேலைகளையும் அன்னன்னிக்கே முடித்தால்தான் அம்மாவுக்கு நிம்மதியா இருக்கும்.சாப்பிடுவதெல்லாம் பிறகுதான்.நான் ஏதாவது அட்வைஸ் செய்தால் "போம்மா இருக்கறவரைக்கும் இருக்கேன்"னு சொல்வாங்க,இப்படிலாம் சொல்லாதம்மானு  வருத்தபடுவேன்.எது எப்படி இருந்தாலும் அம்மா மனசு வருத்தபட்டலும் வருத்தப்படுமே தவிர களைப்பு  மட்டும் அடையாது.என்ன  செய்தாலும் சுத்தமாகவும்,விரைவிலும் செய்து முடித்துட்டுதான் அடுத்த வேலைக்கு போவாங்க.உடல் களைப்பு அடையும்போது மட்டும்தான் ஓய்வு எடுத்துப்பாங்க,திருமணத்திற்கு முன்னும்,பின்னும் என் உடைகளைகூட என்னைய துவைக்க விட மாட்டங்க,அம்மாவின் அன்புமிக்க ஆளுமையில் எந்த அதிகாரமிருக்கது,வெகுளிதனம்தானிருக்கும்.அந்த அன்புமிக்க ஆளுமை என்னை சில நேரம்  லேசாக எரிச்சலடையவும் வைக்கும்,அந்த சமயங்களில் ஏம்மா இப்படி பைதயகாரத்தனமா  யோசிக்கிர,இது (ஏதாவது ஒரு விஷயம்)இப்படி இல்லமா அப்படிம்மானு சொன்னால் கூட ஏத்துப்பாங்க,ஆனால் எனக்கான அம்மாவின் பணிவிடைகளில் மறுப்பு தெரிவித்தால் அம்மாவால் தாங்கிக்கவே முடியாது.அம்மா என்னை இப்படி வளர்த்ததால் திருமணத்திற்கு பிறகு வீட்டு வேலைகள் செய்வதில்  சோம்பெரித்தனமானேன்,அம்மா எப்படி எல்லாத்தையும் மேனேஜ் செய்தாங்கனு யோசிப்பேன்.

                              எங்களுக்குள் மற்றொரு தொடர்பு   கொரியர் சர்விஸ். அம்மா எவ்ளவு மெனக்கிட்டு ஆவலாக செய்வாங்க தெரியுமா? வ.இந்தியா சென்றபோது   வீட்டில் காமாட்சி விளக்கேற்ற  திரி நூல் இல்லை ,சாமி படங்களுக்கு வைக்க சந்தன, குங்குமம் இல்லை.கடைகளில் என்ன பேர் சொல்லி விசாரிப்பதுன்னு  தெரியல,பிறகு விசாரித்ததில்  நம்ம ஊர் அகர்  பத்தியை தவிர  சந்தன,குங்குமம்,திரிநூல்,கல் சாம்பிராணி,நல்லண்ணை (எள் எண்ணை) போன்றவை  எங்கள் வட்டாரத்தில்  கிடைக்காதெனவும் 35 km தொலைவில் உள்ள கரோல் பக்ஹ என்ற இடத்தில்தான் கிடைக்குமென்றும் தெரிந்து கொண்டோம்,இதைப்பற்றி அம்மாவிடம் போனில் சொன்னவுடன்  அம்மா   அகர்பத்தி,எண்ணயை தவிர மீதமுள்ளவற்றை கூரியரில் அனுப்பறேன்னாங்க,சொன்ன ஒரு வாரத்தில் பார்சல் வந்தது,ஆச்சர்யமாக இருந்தது,அழகாக   பேக்   செய்து  அனுப்பியிருந்தாங்க ,இதற்கு முன் எந்த பார்சல் அனுப்புவதில் அனுபவமில்லாத அம்மா எனக்காக எப்படி அனுப்பினாங்கனு போனில் கேட்டபோது அம்மா சொன்னாங்க அனுப்பவேண்டிய பொருளை அட்டை டப்பாவில் பேக் செய்து என் தோழி ஒருவரின் உதவியினால்  அட்ரஸ் எழுதிக்   கொண்டு  கொரியர்  சர்விஸ்  கடையை  விசாரித்து,அதிலும் ஒரு சர்விஸ் எங்களுக்கு  இந்த  அட்ரஸில் செலுத்த இயலாதென  மற்றொரு  சர்விசை  காட்டியதால்   அங்கு சென்று கொடுத்தேன் செக் செய்துகொண்டு எடுத்துகிட்டாங்க னு சொன்னபோது எனக்கு சொல்ல ஒரு வார்த்தையும் வரல . அம்மா அங்க  தொடர்  வாடிக்கையாளர் ஆகிட்டாங்க எப்படின்னா   இங்கு கருவேப்பிலை,சாம்பார் பொடி (குழம்பு பொடி)  வடகம்,குழம்பில் போடும் வத்தல் வகைகள்  கிடைக்காது  ,அம்மா  இதெல்லாம் அவ்வப்போது அனுப்பிகிட்டே இருப்பாங்க                     

                                 ஏதாவது ஒரு காரணம் 5, 6, மாதத்திற்கு ஒருமுறை அமைந்துவிடும் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு.மாமியார் வீட்டில் 4 நாள்,அம்மா வீட்டில் 4 நாள் தங்கிவிட்டு இடையில்  கோவில்,தோழிகள் வீடு இப்படி அந்த 10 ,15 நாட்களும் உலகத்திலே நான் மட்டும்தான் சுற்றுகிறேனோ என்ற மாதிரியான நினைவு,அம்மாவை பார்க்கபோகும்  சந்தோஷம்................
                                அம்மாவிற்கோ  நாங்கள் டிக்கட் புக் செய்த நாளிலிருந்து தூக்கமே வராதுன்னு சொல்வாங்க. நாங்க வருவதற்கு இன்னும் 15 நாட்கள் உள்ளதென்றால்,ஒவ்வொரு நாளும் போனில் பேசும்போதுலாம் 'ஆச்சி உன்னை பார்க்க 15 நாள் இருக்கு,14 நாள் இருக்கு,13 நாள் இருக்குனு நாட்களை எண்ணிக்கொண்டே இருப்பாங்க,சென்னைக்கு  ட்ரைன் ஏறி இறங்குவதற்குள் அம்மாவின் மனசு ஒரு நிலையாகவே இருக்காது,வழியில் எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாம நாங்க நல்லபடியா வீடு வந்து சேரனும்னு எல்லா தெய்வங்களையும் பிராத்திச்சிப்பாங்க,சென்ட்ரல் ஸ்டேசன் வந்து இறங்கி நாங்கள் போன் செய்வதற்குள் அம்மாவிடமிருந்து அழைப்பு வந்துவிடும்,என் கணவரோ ஒன்றும் சொல்லமுடியாமல் நொந்துகொள்வார்.(வழியபாத்து  நட,வீட்ல போய் பேசுங்க,நாம சின்ன பிள்ளைங்களா,பத்ரமா வரமாட்டமா,கிரிகட் கமெண்டரி மாதிரி சொல்லிகிட்டே வர என்பார் )மாமியார் வீடு அருகில் உள்ளதால் முதலில் சென்னையிலிருந்து  மாமியார் வீட்டில் தங்கிவிட்டு 3 ,4 நாட்கள்  கழித்துதான்  அம்மாவீட்டிற்கு நாகபட்டினம் செல்வோம்.அதற்குள் அம்மாவின் உடல் மட்டும்தான் அங்கிற்கும்,நினைவு அத்தனையும் என்னை பார்க்க போகும் வினாடிக்காக  ஏங்கிக்கொண்டிருப்பார்கள்.என் கணவரும் மாமிக்கு ஒரே மகன்,அவர்களும் தன் பிள்ளையின் மீது அதிக பாசம் கொண்டவர்தான்,ஆனாலும் அவர்கள் அன்பில் மெச்சூரிட்டி இருக்கும்,ப்ராக்டிகலாக  இருக்கும்.ஆனால் மருமகளை விட மகனுக்கு கவனிப்பு ஸ்பெசலாகதானிருக்கும்.என் அம்மாவோ ஒரு குழந்தை தன்  அம்மாவுடன் எப்படி பரஸ்பரமாக வாழ  விரும்புமா அப்படி 'தான்' அம்மவாகியும் தன் மகளிடம் இருந்தாங்க.

Friday, November 19, 2010

(இ). என் திருமணம்

                    எல்லா குழந்தையும் நல்ல குழந்தைகள்தான் மண்ணில் பிறக்கையிலே,நல்லவராவதும்,தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே என்பது என்னை பொறுத்தவரை கால் பகுதிதான் உண்மை,மீதி முக்கால்  பகுதி  பிள்ளைகள் வளரும் சூழ்நிலையை   பொறுத்துதான் என்று சொல்லுவேன்.
                                         
                     மிடில் கிளாஸ் பெண்ணாக,பிரச்சனைகளுடன் அன்பு  நிறைந்த, அன்பையும் ஒற்றுமையையும்  எப்படி பகிர்வது  பற்றிய பக்குவமில்லாத குடும்ப நபர்களுடனும்,  என் மீது கண் மூடித்தனமான பாசம் வைத்திருந்த அம்மாவுடனும்,அவசியமில்லாத மன கஷ்டங்களையும்,ஏமாற்றங்களையும் பருவ வயதில் பெற்றவளாய்,என்ன செய்ய போகிறோம்,வாழ்க்கையின் அர்த்தமென்ன?,எப்படி வாழ்வது என்று கற்றுக்கொள்வதற்குள் வாழ்க்கையே முடிந்துவிடும் என்று யாரோ  சொன்னதாக எதிலோ படித்துள்ளேன்.இப்படியான எனக்கு திருமண வாழ்வைப்பற்றிய பயம்,கேள்விக்குறி எல்லாமே இருந்தது.
                              
                              என் வளர்ச்சியும்,சந்தோஷமும் தன் மூச்சாக கொண்ட என் அம்மாவை அடுத்த கட்டமாக கண்ணீர் விட நானே காரணமானேன்.கலப்பு திருமணம் செய்துகொள்ள நான் முடிவெடுத்ததுதான்முக்கிய காரணம்.ஹிந்து மதம்தான் சாதி பிரிவுதான் வேறு.என்னை விரும்பியவர் பல பிரச்சனைக்குரிய சூழ்நிலை வந்தபோதும் என்னைவிட மனம் தளராதவராய் நல்லபடியாக திருமணம் செய்துகொள்ள தன்னால் முடிந்த வழிகளிலும்,விட்டுகொடுத்தும்,அனுசரித்தும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் எங்கள் காதல் திருமணம் நடந்தேறியது.
                                   
                                என் திருமணம் முடிவதுற்குள் அம்மாவின் முழு உயிரும் கண்ணீரில் கரைந்து விட்டது எனலாம்.திருமணத்திற்கு கணவர் வீட்டில் எந்த தடையும் இல்லை.என் பெற்றோருக்கு (மிடில் கிளாஸ்)பெற்றோருக்கே உரித்தான முதல் பயம் பெண்ணின் வாழ்க்கை நல்லபடியாக அமையுமா ?இரண்டாவது கலப்பு திருமணம் செய்துக்கொண்டால் உறவினரால் ஒதுக்கபடுவோம்,ஊராரின் ஏளனத்திருக்கு ஆளாவோம் என்பதுதான்.தற்காலத்தில் எத்தனையோ இது போன்ற திருமணங்கள் நடந்தாலும்,என் அப்பாவின் கண்களுக்கு பல தோல்வியுற்றோரின் வாழ்க்கை சம்பவங்களும் சாதி பிரிவும்தான் முன் நின்றது.நானோ நான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை தோல்வி/வெற்றி அடைந்தாலும் பரவாஇல்லை நீங்கள் தேர்வு செய்யும் வாழ்க்கைக்குள் நுழையமாட்டேன் என்பதில் பிடிவாதமாக இருந்தேன்.முதன் முதலாய் அப்பா அழுதும் பார்த்தேன்.அப்பாவை அழ வைத்துவிட்டேனேன்றுதான்  சொல்ல வேண்டும்.நானும் வருத்தபடுவேன் அழுவேன்,அனால் என் முடிவில் உறுதியாக  இருந்தேன். வீட்டு கைதி என்று சொல்லுமளவிற்கு சில நாட்களும் சென்றது.எங்களுக்குள் தெய்வீக காதல் அப்படி இப்படி என்று சொல்லி நாங்கள்  உறுதியாக இல்லை.ஒருவருக்கொருவர் பிடித்திருக்கிறது,என்னைவிட திறமையானவர்,குறிப்பாக  எளிமையானவர்,எதிலும் பக்குவம்பெற்றவர்.தெரியாத ஒருவரை விட அறிமுகமான  நல்ல குணமுடயவருடுன் வரபோகும் வாழ்நாட்களை மனதிற்கு பிடித்தவருடன் வாழலாம்,நல்லது கெட்டதுகளை சமாளித்து கொள்ளலாம் என்பதில் உறுதியாக இருந்ந்தோம் .ஆனாலும் சில சூழ்நிலையில் என் மனம் தடுமாறத்தான் செய்தது.
                                அம்மாவும் அம்மாவின் மூலமாக அப்பவும் தங்கள்  வகுப்பில் திருமணம் செய்துகொள்ள  எத்தனையோ முயற்சிகள்  செய்தனர்.என்ன  செய்வதென்று புரியாத  அப்பா அம்மாவிற்கு  மனகஷ்டத்தை ஏற்படுத்தினால் அம்மா பாசத்தினால் மனமாறிடுவேனும் முயற்சித்தார்.அம்மா இரு தலை கொள்ளியாய் கணவனிடமும் மகளினுடனும் சிக்கி தவிச்சாங்க.   பல சங்கடங்களுக்கு பிறகு,என் தோழிகள்,தோழிகளின் பெற்றோர்,முக்கியமாக எனக்கு பம்மி என பெயரிட்ட மாமா ஆகிய  அனைவரின் முயர்சியுடன் சொல்வதைவிட அவர்களின் ஆதரவுடன் என் அன்பிற்குரியவரின்  உறவினர்கள்,எனது சில உறவினர்  மற்றும் எங்கள் பெற்றோரின் ஆசியுடன் ஒருவழியாக எங்கள் திருமணமும்,அப்பாவின் நண்பர்கள் ஆதரவுடன் வரவேற்பும் நல்லபடியாக நடந்து முடிந்தது.விரும்பியவரை மணம் செய்துகொண்டாலும்,நமக்கு திருமணம் நிகழ்கிறதன்ற  சந்தோஷமும்,நம்பிக்கையும்  உணரும் படியான சூழ்நிலைகள் இல்லாமலே   நல்லபடியாக நடந்தது. எனக்கோ சவாலான புது வாழ்க்கைக்குள் நுழைகிறோம் என்றாலும் அப்பாவை விட அம்மாவை பிரிவதுதான் பெரிய மன பாரம்.கணவர் வட இந்தியாவில் வேலை பார்ப்பதால்,எனது வாழ்க்கை மிக வித்தியாசமாகவும்,இதுவரை பார்க்காத கலாச்சாரங்கள்,சூழ்நிலைகள்,மனிதர்கள் என புதுமையாகவே தொடங்கியது.அங்கும் எனக்கு உதவவும் வழிகாட்டவும் ஒரு தமிழ் குடும்பம் கிடைத்தது. 
             
                          திருமணத்திற்கு முன்போ பின்போ எத்தனை புரிதல்கள் இருந்தாலும் வீட்டுக்கு வீடு வாசல் படி என்பது போல அதே புது சூழலும்,தனிமையும்,கடந்த காலங்களாலும் ஊடலும், கூடலுமாய் சென்றது.தனிமையும்,தமிழ்நாட்டிலிருந்து இத்தனை தூரமுமே எங்களுக்குள் சில சங்கடங்கள் ஏற்படவும் சமாதானம்  பெற காரணமாக அமைந்தது. நடந்த ஒவ்வொன்றும்  எங்களுக்குள் அன்பை ஆழப்படுத்தவும்,திருமணத்திற்கு முன் எத்தனை ஆழமாக விரும்பினாலும் ,திருமணத்திற்கு பின்தான்  24 மணி நேரமும் நமது வாழ்க்கைத்துனயுடன் (வாழ்கிறோம்)வாழும்போது எத்தனை புரிதல்கள் தேவைப்படுகிறது என்பது தெரியவந்தது.எங்களுக்குள் அதிக விட்டுகொடுத்து போனவரில் அதிக வாக்கு என் கணவருக்குத்தான்.தம்பதிகளுக்குள் மன வருத்தமும்,குழப்பங்களும் வருவதற்கு காரணமே ஒருவருக்கொருவர் அன்பை எப்படி பரிமாறிக்கொள்வது பற்றி தெரியாமல் போவதும்,தெரிந்தாலும் ஈகோ வாக இருப்பதும்தான்.என்  குடும்பம் முதல் தோழிகள்,அண்டை  அயலாரின்  வரை  குடும்பம் பல சங்கடங்கள் ஏற்பட்டபோது  நாம் வேடிக்கை பார்ப்போராய், தூரத்திலிருந்து பார்க்கும்போது நம் ஆறாவது  அறிவிற்கு தவறு யாரிடம் உள்ளது இவர் இப்படி செய்தால்  சமாதானம் கிடைக்கும் என்றெல்லாம் தோன்றினாலும்,நமக்கென்று சங்கடங்கள் வரும்போது ஆறாவது அறிவு குன்றித்தான் போகிறது.

                             எது எப்படியோ என் அப்பா எதிர்மறையாக  எதிர்பார்த்தது போல் இல்லாமல்  அப்பா அம்மாவிற்கு நம்பிக்கை உடையவராய்,நாளடைவில் நாங்கள் பார்த்திருந்தால் கூட இப்படி ஒரு மாப்பிள்ளயயை உனக்கு தேர்வு செய்திருக்க முடியாதுன்னு சொல்ற அளவிற்கு உணரப்பட்டார் என் கணவர்.என் கணவரும் என் திருமண  வாழ்வும் நல்ல ஆசிகளின் சக்திகளின் பரிசளிப்புதான். மீதமுள்ள காலமும் நல்லபடியாக அமைய அதே நல்ல சக்திகளின் ஆசிர்வாதங்களை வேண்டுகிறேன்.      
                 

Tuesday, November 16, 2010

(ஆ).அப்பா அம்மாவுடன் நான்

                            எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அன்னையால் மட்டுமே ஒரே மாதிரியான அன்பை பகிர முடியும்.நானோ என் அம்மாவுக்கு ஒரே பெண்,அம்மாவின் முழு சக்தியையும் எனக்காகவே செலவிட்டார்,மேலும் தம்பியும் தங்கையும் அம்மா என்று கூப்பிடும் அளவிற்கே  வித்யாசமில்லல்லாமல் எங்களை வளர்த்தார்கள்.
                             
                                         அம்மாவும் சித்தியும் அத்தனை பக்குவும் பெற்றவர்கள் கிடையாது,சராசரியான கிராமத்து பெண்கள்,அனைவரும் ஒரே வீட்டில் வாழ்ந்தோம், பிள்ளைகள் ஏன்,எதற்கு,எப்படி என கேள்வி கேக்க  ஆரம்பிக்கும் வரை குடும்பத்தில் சில பிரச்சனைகளும்,உரிமை போராட்டங்களுமாய் நாட்கள் நகர்ந்தது.... அப்பாவும் எதுவாக இருந்தாலும் சமாளித்து குடும்பம் நடத்தினர்.பிள்ளைகளுக்கு சுததந்திரமும்,கல்வியறிவும் தந்து வளர்த்தார்
                                நான் பிறந்த  போது  அம்மா  முத்தரசி  என்றே பெயர் வைக்க ஆசைப்பட்டாங்கலாம்,அனால்  குல தெய்வத்தின்   பெயர் படி பரமேஸ்வரி என்று பெயரிட்டாலும்,அப்போது எங்க பக்கத்தில் ஆச்சி என்ற பெயருக்கே உரித்தான வகுப்பினர்கள் பெரும்பான்மைனர் என்பதால் அவர்களின் அன்பினாலும் அம்மாவிற்கு பிடித்திருந்ததாலும் என் பெயர் ஆச்சி என்றாகியது.ஆச்சி ஆச்சி என்று அம்மா மூச்சுக்கு முன்னூறு தடவை கூப்பிடுவாங்க...அந்த குரலையும் அந்த அழைப்பில் உள்ள பாசத்தையும் மீதமுள்ள என் வாழ்நாட்களில் மறக்கவும் முடியாது,திரும்ப பெறவும் முடியாது!!!தன் குழந்தை  வளருவதை,ஏற்படும் மாற்றங்களை ரசிக்காதவர் யாருமில்லை,அதே போன்றுதான் என் பெற்றோரும்.
                     
                          எனக்காக அப்பா தன்  சைக்களில்(அந்த காலத்து ஸ்டைலில்)முன் பகுதியில் உட்கார சின்ன மரத்தாலான சீட்,கொஞ்சம் பெரிதானவுடன் குழந்தைகள் உட்கார ஒயரால் செய்யப்பட்ட சீட்டை  ஹேன்ட் பார் பகுதியில் மாட்டி அதில் உட்கார வைத்து அலைத்த்ச்செல்வராராம்,பஸ்ஸில் போகும்போது முன்னாடி உட்காந்தால் எளிதில் அடிபடலாம்,பின்னாடி உட்காந்தால் தூக்கி தூக்கி  போடுமென  நடு சீட்ல் உட்கார இடம் கிடைக்கும் பஸ்ஸாக அப்பா தேடுவாராம்,12 ,13  வயது வரை அப்பாவை தூக்குங்க அப்பா என்று கேட்டு அப்பாவும் என்னை தன் இடுப்பில் வைத்து வீட்டிற்குள்ளே   ஒரு ரவுண்டு போயிட்டு வந்தது ஞாபகம்  இருக்கிறது. எத்தனை முறை கேட்டாலும் மறுக்கமாட்டார்.
                      
                                   அப்பாவுடன்  சைக்களில் போவது,கடற்கரையில் அப்பாவுடன் குளித்தது எல்லாமே அன்று சந்தோசமாய்,இன்று நினைவாய் உள்ளது.அப்பா எனக்கு நீச்சலும்,சைக்கள் ஓட்டவும்  கற்றுக்கொடுத்தார்கள்,கற்றுக்கொள்ள நான் சிரமபட்டதைவிட அப்பா சிரமபட்டதுதான் அதிகம். சிறு வயதில் ஒரு நாள் அப்பா ஹோட்டலுக்கு அழைத்து சென்றபோது சுவர் ஓரமான டேபிளில் உட்கார்ந்தோம்,சுவர் ஓரமாய் ஜன்னலில் வேடிக்கை பார்த்துகொண்டிருந்த எனக்கு சுவற்றை முட்டும் படியாக   சர்வர்கொண்டு வந்து வைத்ததும் பெரிய அதிசியமாய் இருந்தது,அன்றுதான் அத்தனை பெரிய  தோசையை பார்த்தேன்(பேப்பர் ரோஸ்ட்) அதன் வடிவம்.அன்றிலிருந்து பேப்பர் ரோஸ்ட் என்று சொல்ல தெரியாமல்  செவுத்த முற்ற தோசை வேணும்னு கேட்பேன்,வீட்டேல் எல்லோரும் கிண்டல் பன்வாங்க, 
                    
                                விளையாட்டாக  அப்பாவின் சட்டைதான் எனக்கு பெரிய டிரஸ்(கண்டகால் வரை இருக்கும்)அவரின் சட்டடையை போட்டுக்கொள்வதில் அப்படி ஒரு ஆனந்தம்.அப்பா பிர்கலாத்தில் ப்ரோமோசன் அனாலும் லயன் மேனாய் உத்தியோகம் தொடங்கியவர்  உயிரை பணயம் வைத்துதான் எங்களை சவ்கரியமாக வாழ வைத்தார்,அப்பாவும் அம்மாவும் ஒரு சின்ன பொருள் வாங்கினால் கூட அதை பார்ப்பவர்கள் ஒரு நொடி அதிகம் பார்க்கும்படியாக,மற்றவர்களை கவரக்ககூடியதாகத்தான்  இருக்கும்! 
                      
                                அப்பாவும் தன் சிறு வயதிலிருந்து கஷ்டப்பட்டு தன்னையும் தன்னை சார்ந்தவரையும் முன்னேற்றியவர்தான்,அப்பாவை பற்றி இத்தனை கூறினாலும் சில கால கட்டங்களில் சில கசப்பான தருனங்கலும் வந்து போனது என்று மட்டுமே கூறவிரும்புகிறேன்,அப்பா என்று கூப்டாமல் வீம்பு பிடித்து இருந்த நாட்களும் உண்டு. அப்பாவிடம் கற்றுக்கொண்டது 'உன்னால்  இயன்ற வரை முயற்சி செய்,எதையும் எளிதாக நினை,பிறரை எதிர்பார்க்கதே'
                       
                                  குறிப்பாக பண்டிகை நாட்களை பெற்றோருடன் கொண்டாடியதை மறக்க முடியாது,ஆடி 18 ற்கு அம்மா மற்றும் அக்கம் பக்கத்தாருடன் அருகிலுள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று  பூஜித்து  ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிறு  கட்டிக்கொள்வதும் எண்ணிக்கையில்  எனக்கு நிறைய,உனக்கு குறைவென்று சக தோழியருடன் போட்டிக்கு நின்றதை மறக்க முடியாது,எந்த பண்டிகை,விசேஷ நாட்களானாலும்  அம்மா அழகாக,முறையாக  சொல்லப்போனால் ஒரு பிராமிணர் வீட்டில் எப்படி செய்வாங்களோ அப்படியே செய்வாங்க,மந்திரங்கள் சொல்லத் தெரியாதது ஒன்றுதான் குறை.  
                                     
                                    விநாயக சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, தமிழ் வருட பிறப்பு,தீபாவளி,கார்த்திகை மாத தீபம் , பொங்கல், என  விசேஷ  நாட்கள்  அனைத்தும்  பெற்றோருடன்  கொண்டாடியது  இயற்கையான இனிமையான நாட்கள். மார்கழி மாதத்தில் அம்மா அழகான பெரிய கோலங்கள்  போடுவாங்க,நாங்க கலர் கொடுப்போம்,அம்மா நிறைய கோளங்களின் கலக்சன்ஸ்  வச்சுருப்பாங்க,குறிப்பாக தீபாவளி, பொங்கல்.வேறு நாட்களில் புத்தாடை அணிவதை விட தீபாவளி, பொங்கலில்  அணிவதுதான் எனக்கு உலக மகிழ்ச்சி.சிறு வயதிலிருந்தே ட்ரஸ் செலக்ட் செய்ய அப்பா பிள்ளைகளையும் அழைத்துச்செல்வார்,பண்டிகை ஸ்பெசல் பலகாரம் செய்வது,வீடு சுத்தம்  செய்வது, பூஜை  புனஸ்காரங்களை செய்வது எல்லாம் அம்மா பொறுப்பாக பாத்துக்குவாங்க,                                    
பிள்ளைகள்  நாங்கள் நல்லா டீ.வீ பார்ப்போம்,நிலைகளுக்கு மஞ்சள் குங்குமம் இடுதல்,மிக சின்ன உதவி எதுவாயிருக்குமோ அதை செய்வோம்.தீபாவளி பொங்கலின் போது ஆடை அணிகலன் எடுப்பதில் ஏதாவது பிரச்சனை வந்தால் அப்பா அதற்கு "தீபாவளி சண்டை,பொங்கல் சண்டையின்னு பேர் வைப்பார்.
                     
                            பண்டிகை தினத்தன்று வீட்டில் எல்லோரும் ஒன்றாக நின்று சாமி கும்பிடுவதையும்,அப்பவோ அம்மாவோ  புது  ட்ரஸில்  மஞ்சள்   வைத்து போட்டுக்கிட்டு வாங்கனு  சொல்லும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு இணையே  இல்ல,அணிந்த பிறகு  அப்பா அம்மாவிடமும்,அக்கம் பக்கத்தினரிடமும்   ட்ரஸ்ஸை காமித்து மகிழ்ந்ததை எந்த  வினாடியும்  மீட்டுத்  தராது,,,   
                      
                                 அம்மாவோ பொழுது விடிந்ததிலிருந்து இரவு தூங்கும் வரை தன்னை பற்றி நினைப்பதைவிட என்னை பற்றி நினைப்பதும் எனுடைய ஒவ்வொரு அசைவிலும் தன் பங்கு,உதவி இருக்க வேண்டுமென்பதில் அவ்வளவு கவனமாக இருப்பார்.  அம்மா தலை வாரி விட்டால் இரவு வரை கலையாது,நான் கல்லூரி முடித்து வேலைக்கு போகும் வரை சீப்பை பிடித்து நானாக ஒன்றும் செய்ததில்லை, சடையில் பூ தைத்து அலங்காரம் செய்வது,எனக்கு 10 வயதிருக்கும்போது சைடு காது குத்தும் பேஷன்  அங்கும் இங்குமாய் துவங்கியது,அம்மாவுக்கு எனக்கும் சைடு காது  குத்தி அழகு பார்க்க ஆசைப்பட்டாங்க,நானும் ஒத்துக்கொண்டதால் காதில் இன்னொரு தோடு வந்துவிட்டது,அம்மா சந்தோஷப்பட்டாலும் சிலர் நல்லாயில்லைன்னு சொன்னதால் இன்னொரு தோடு போடுவதை நிறுத்திவிட்டேன்,அம்மாவை இது பெரிதாக பாதிக்கவில்லை,எதற்கு சொல்றேனேன்றால் அம்மாவிற்கும் எனக்கான உறவு இப்படிதான்,அதாவது தன் மகளுக்கு தன்னால் என்னென்ன  புதிதாக, மாடலகா   செய்து அழகு பாக்க முடியுமோ,அதை செய்வதற்கு  எனக்கும் விருப்பமிருந்தால்  செய்வாங்க,கட்டாய படுத்தமாட்டாங்க,எழாம் வகுப்பு படிக்கும்போதே  அம்மா மிக ஆசைப் பட்டு ' மூக்கு  குத்திக்கோ ஆச்சி, பெரிவளாயிட்டா மூக்கு ரொம்ப வலிக்கும், பொண்ணுக்கு மூக்குத்தி மிக அவசியம்னு  ஆரம்பித்து ஒரு நாள் பத்தரிடம் அழைத்து சென்று மூக்கு குத்திவிட்டதேல்லாம்    பெரிதல்ல, முக்குத்தி  அணிந்தவுடன்   உனக்கு அழகா இருக்கு ஆச்சி, இப்பவே  ஞாபகார்த்தமா போட்டோ  எடுத்து  வச்சுக்கலாம்னு  அழச்சுட்டு போனாங்க,அந்த போட்டோவில் என்  மூக்குத்தி தெரியவே இல்லை, ஆனாலும்  அதை பார்த்து  அவ்ளோ   சந்தோஷப்பட்டாங்க {இப்போ முதன் முதலாய் எடுத்த அந்த மூக்குத்தியும், அந்த போட்டோவும் அம்மாவின் நினைவுகளும்  மட்டுமே என்னிடம் உள்ளது}   பிடித்த  உணவு  சமைப்பது, சுத்தமாக  இருக்க  கற்றுகொடுத்தது, இறை வழிபாடு,  இப்படி    எல்லாவற்றிற்கும் என் அம்மாவுக்கு இணை என் அம்மாதான். அம்மா எத்தனை நல்லது சொல்லிக் கொடுத்தாலும் அம்மாவிடமிருந்து முழுமையாக எதையும் நான் கற்றுக்கொள்ளவில்லைதான்னு  சொல்லனும், 
                          
                                 எனினும் " ஏன் ஆச்சி இப்படி செய்ற, ஏன் என் உயிரை வாங்குற,சொல்றத கேக்கவே மாட்டியா " என்று நிஜமான கோபத்திலும், சில சமயம் செல்லமாகவும் அம்மாவின் குரல் ஒலித்ததை மறக்க முடியாது.  நிஜமான, செல்லமான திட்டு, குட்டு,அடி வாங்கியதும்  உண்டு.  டயம் ஆனாலும் சாப்பிட்டுத்தான்  போகணும்,இல்லேன்னா அம்மா முகமே வாடிவிடும்,பக்கத்துக்கு வீட்டுக்கு போனால்கூட "அம்மா போயிட்டு வர்ரேம்மானு சொல்லிட்டு போனால் அம்மா முகத்தில் அப்படியொரு சந்தோஷ ரேஹை தெரியும்.
                      
                                    சில பிரச்சனையினால் அம்மா என்னை கண்ணீரால் கழுவிதான் வளர்த்தாங்க,குறிப்பிட்ட வயது வரை வீட்டின் அருகில் உள்ள குளத்தில் குளிக்க சென்றதும்,எத்தனையோ முறை அம்மா தலைதேயத்து குளிப்பட்டியதும்,நான்  தனியாக குளத்துக்கு செல்லும்போது பக்கத்தில்  இருப்பவர்களெல்லாம் எவ்ளோ நேரம் தண்ணில ஊர்றனு திட்டும்போதுலாம் கரையேராம   ' ஏய் எருமைமாடு   வரியா இல்லையான்னு 'அம்மா வந்து கூப்பிட்டவுடன் போவதும் மறக்கமுடியாது.
                     என்   உருவம் அம்மா மாதிரி கிடையாது,அப்பா மாதிரி, கலரும் கொஞ்சம் அதிகம், இதில் அம்மாவுக்கு  பெருமைதான் என்றாலும்,வெளி இடங்கள் சிலவற்றில் சிலரின் கண்களுக்கு நான் அம்மாவுடன் போகும்போது 'இது உங்க பொண்ணா நம்ப முடியலனு ' கேப்பாங்க,'என் பொண்ணுதாங்க'னு அம்மா சந்தோஷமா சொல்லுவாங்க,    
                       
                              ஒன்பதாவது வயதில் என் அஜாக்ரதயால் விபத்துக்குள்ளானேன் பைக்  மோதி கால் உடைந்தது,எனக்கு என்ன   நடந்துள்ளது என்று அப்பாவின் பரிதவிப்பையும்,அம்மாவின்  கதறலும்  கொண்டு உணர்ந்தேன்,திருவேரும்புர்க்கு அழைத்து  சென்று ட்ரீட்மென்ட் கொடுத்தாங்க,நடக்க முடியமால் படுத்த படுக்கையாய் இருந்த எனக்கு,பிறந்த போது அம்மா எனக்காக என்னவெல்லாம் சேவை செய்தார்களோ அதெல்லாம் அப்போது ஞாபகம் இல்லை,அதை நினைவில் வைத்துக்கொள்ளவே அந்த விபத்து ஏற்பட்டது போல.அம்மா முகம் சுளிக்காமல் அத்தனை காரியங்களையும் செய்தார்.
14 வயதுக்கு 20 வயதுக்கு முன் அம்மாமீதும் கால் போட்டு படுத்து தூங்கியது ஞாபகம் உள்ளது,அந்த இன்பங்களையெல்லாம் எங்கும் எதிலும் பெற முடியாது.  
  
                              15  வயதிருக்கும்போது எனக்கு அம்மை வார்த்தது,அப்போ அம்மா தவிச்ச தவிப்பு விவரிக்க முடியாதது,உருகி உருகி அம்மனை பிராத்திப்பாங்க,பக்கத்தில் இருந்த தாத்தாவை அழைத்து பால்,வேப்பில்லை வைத்து அம்மன் பாடலை பாடசொல்லி  பூஜித்தது நினைவுள்ளது, அப்போதிலிருந்து அம்மாவின் ஆயுள் வரை நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலுக்கு தன் ஆயுள் வரை வருஷத்திற்கு ஒரு முறை அங்கப்பிர்தச்சனம் செய்வதாக வேண்டிகிட்டு கடைசிவரை செய்தாங்க,என்னையும் அப்பாவையும் தவிர அம்மாவிற்கு மிகவும் விருப்பமானவங்க நெல்லுக்கடை மாரியம்மன்தான்,அந்த அம்மனிடம் பிராத்தனை செய்துதான் நான் பிறந்ததாகவும்,பிறந்த பிறகு அப்பாவும் அம்மாவும் கரும்பு தொட்டியில்  என்னை வைத்து பிரகாரம் சுற்றி வந்ததாகவும் அம்மா சொல்வாங்க   இதற்கெல்லாம்  நான் என்ன ஈடு செய்ய முடியும். 21 வது வயதில் ஒரு முறை எனக்கு உடல் நிலை சரியில்லாமல் மிகவும் மோசமாகி போனது,அப்போது அம்மா கவனித்த கவனிப்புக்கும்,தவிப்புக்கும் இணையாக நான் எதுவும் அம்மாவுக்கு செய்யவில்லை.



               குடும்ப பிரச்சனையினால் அம்மா சில நாட்கள் என்னை அப்பாவிடம் விட்டுவிட்டு தாத்தா வீட்டுக்கு சென்றுவிட்டார். பள்ளிக்கு சென்ற நான் வகுப்பில் அமர்ந்து அம்மாவுக்கு கடிதம் எழுதிக்கொண்டிருந்ததை பார்த்துவிட்ட என் ஆசரியர் தமிழ்செல்வி&வெண்ணிலா அவர்கள்  என்னை விசாரித்து பிறகு அவர்களே தன் கைப்பட கடிதம் எழுதி அம்மாவை வர வைத்தார்கள்,வந்த பின் கவுன்சிலிங் (என்று சொல்லலாம்)கொடுத்தார்கள்,அதற்கு பின் அம்மா அந்த மாதிரி முடிவு எடுக்கவில்லை,இப்போது அந்த ஆஸ்ரியயைகள் எங்கு உள்ளார்களோ எனக்கு தெரியாது,அவர்களுக்கு என்றும் நான் நன்றி கடன் பட்டவள். 
                                   
                         அப்பாவை விட்டு பிரிந்து என்னையும் அழைத்துக்கொண்டு அம்மாவும் நானுமாய் தனியாக  வாழ எவ்வளவோ முயற்சி செய்தார்  அம்மா,அனால் அப்பா விட வில்லை,என்னநடந்தாலும் குடும்பம் பிரியக்கூடாது என்பதில் உறுதியாய் இருந்தார் அப்பா,அனால் கடைசி வரை அம்மாவின் மன போராட்டம்  குறையவில்லை.என் மீதான அக்கறையும் குறையவில்லை.
                               
                                வீட்ட்டில் குளிக்க ஆரம்பித்ததிலிருந்து என் அம்மாவுடன் கடைசியாக இருந்தது வரை வெந்நீர் வைத்து அதை டப் ல் ஊற்றிவைக்காமல் இருந்ததில்லை,தலை குளித்தால் ஆச்சி தலையில டவலை சுத்தி வை,காய விடு,சளி பிடிச்சுக்கும்னு நூறு தடவ சொல்லிடுவாங்க,என் துணிகளை கூட துவைக்கவிட மாட்டாங்க,பள்ளிக்கோ,கல்லூரிக்கோ எனக்கு முன்னாடி எழுந்து தேவையான எல்லாம் செய்து என்னை அனுப்பிவைப்பதில் ஒரு நாள் கூட அலுத்துகிட்டதே இல்ல
                                  
                                     மேலும்  நான் மாலை வீட்டுக்கு வரும் நேரத்தில் வாசற்படியிலே என்னை எதிர்பர்த்து  உட்காந்துட்டுருப்பாங்க ,ஏதாவது வேலை இருந்தாலும் வாசலுக்கு  வந்து, வந்து  எட்டிப்பாத்துட்டு  போவாங்க,ஏன் தாயே இப்படி பண்றனு  கேட்டால் அம்மாவின் முகத்தில் மெல்லிய புன்னகை தெரியும்,மம்ம்மினு கூப்பிட்டால் அம்மாவுக்கு சிரிப்பு வந்திடும்.அவ்வப்போது சின்னதாய் நக்கலும் ஏதாவது கோணங்கித்தனமும் செய்து அம்மாவை சிரிக்க வைக்க முயற்ச்சி செய்வேன்,வெற்றியும் பெறுவேன்.    அசரிரீ  போல  இதை செய்யாதனு அம்மாஒரு விஷயத்துக்கு தடை விதிட்சாங்கன்னா நான் மீறி நடந்தால் அந்த செயல் திருப்திகரமாகவே இருக்காது,அம்மாவின் அனலைசிங் பவர் என் விஷியத்தில் சரியாக இருக்கும்.பத்து வயதுக்கு                          அப்பாவுடன்  வெளியில் சென்ற   நாட்களை விட அம்மாவுடன் சென்ற நாட்கள்தான் அதிகம்.ஆடம்பரமில்லாமல், தகுதியை மீறாமல் அம்மா எனக்காக தேடி தேடி அணிந்துகொள்ளும் பொருளும் தின்பொருளும் வாங்கித்தந்து நான் சாப்பிடுவதையும் ,அணிந்திருப்பத்தையும் பார்த்து சந்தோஷப்படுவாங்க, எனக்கு ஜில்லுனு சாப்பிட்டால் ஒத்துக்காது நீ என்ன வேணும்னாலும் வாங்கி சாபிடுனு சொல்லி வாங்கித்ருவாங்க,அம்மாவுடன் என் கடைசி பயணம் என்று தெரியாமல் நாகையின் அந்த பிரபலமான ரசிடாரண்டில் அம்மாவை ஐஸ் போடாமல் ஒரு பழ ஜூஸாவது குடிம்மானு கட்டாயமாக குடிக்கவைத்தேன்.என் வீட்டாருக்கு வழக்கமான  ரசிடாரண்டை  பார்க்கும்போதெல்லாம் ஒரு நிமிடம் மனசு கனக்கிறது
                  
                                    அம்மாவிற்காக  பெரியளவில் ஒன்றும் செய்ய முடியாவிட்டாலும் எனக்கு மிகவும் பிடித்த,அம்மாவின் முன் அமர்ந்து  பலமுறை சாப்பிட்ட,தவறாமல் அம்மா வாங்கிகொடுத்த ஐஸ் கிரிமையும்,பாதன்கீரையும் இனி சாபிடவே கூடாதுனு முடிவெடுத்துள்ளேன்,அம்மா நீ எப்போ என் கண் முன் வருவ,அம்மா உன் கைய பிடித்தும் /  உம்மேல உரசிகிட்டும் நடந்து வருவேனே  அதெல்லாம் மீண்டும் எனக்கு கிடைக்கவே கிடைக்காதாம்மா ... உன்ன ரொம்ப  மிஸ் பண்றேம்மா !!!நாம்  இவ்ளவு விரைவில் பிரிவோமென்று இருவரும் நினைக்கவில்லையே அம்....மா....
அம்மா எதையும் எதிர்பார்க்க விட்டாலும் அம்மாவிற்கான நன்றி கடன்  தீர்க்கவே ஒரு ஜென்மம்  போதாது,அனால் இந்த ஜென்மத்திலே   அம்மாவிற்காக ஒன்றும் செய்யாத பாவியாகிவிட்டேன்,அம்மா எல்லாம் வழங்குபவராகவும்,நான் பெருபவளாகவும்
மட்டுமே வாழ்ந்துவிட்டேன். 
                            
                              என் பருவ வயதும்,படிக்கும் நாட்களிலும்  பல,சில இன்ப துன்பங்களுடன் நகர்ந்தது என்று மட்டுமே சொல்ல விரும்புகிறேன்,ஏமாற்றங்களுக்கும் குறைவில்லை.ஆசரியர்கள் மெட்சுமளவிற்கு படிப்பு  எனலாம்,பிறகு டிப்லமொவிற்கு சென்றேன்.B .E. படிக்க ஆசைப்பட்டேன் ,அதுவும் நிறைவேறவில்லை,எனவே அப்பா கம்ப்யுடர் கோர்ஸும்  படிக்க வைத்தார்கள்.படிக்கும் காலங்களில் நான்கு நல்ல தோழிகளை பெற்றேன்,எங்கள் குடும்பமும் நண்பர்களகுமளவிற்கு பழக்கமானோம்.என் குடும்பத்தில் நடைபெறும் எல்லா நல்லது கெட்டதுக்கும் முறைகள் செய்ய மட்டுமே உறவினர்கள்,மற்றபடி மன ஆறுதலுக்கும்,இன்ப துன்பங்களை உண்மையான,தூய்மையான மனதுடன் பகிர்ந்துகொள்ள,உதவ முன் வருபவர்கள் தோழிகள் மட்டுமே,இதில் அப்பாவின் நட்பு வட்டாரங்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.எனக்கு பம்மி என்ற  பெயரும் சொந்தங்களைவிட மேலாக  பழகிய ஒரு குடும்பத்தினரே   வைத்தார்கள்
                       
                                நாட்கள்  ஓடியது,படித்தத்தை  வைத்து  வேலை தேடினேன்,ஓராண்டு தேடல்களுக்கு பிறகு படிப்புக்கு சம்பந்தமில்லா வேலையானாலும் பரவால்லைன்னு முடிவு செய்தேன், படிக்க&வேலைக்கு போகும்போதுதான் மனிதர்களும்,குணங்களும் இத்தனை வகை உள்ளதென்றும்,தமிழில் கூட நாலு வார்த்தை தொடர்ந்து  பேச தெரியலனும்,உலகம் ரொம்ப பெரியதுனும்,கத்துக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளதுனும் உணர்ந்து கொண்டேன்
                         
                                 வெளியூரில் வேலை பார்த்ததால் வாரத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு  வருவேன்,அம்மாவிற்கு ஒரு விதத்தில் சந்தோஷம் இருந்தாலும்,என் ஆறு நாள் பிரிவை தாங்க முடியாமல் என் அம்மா பட்ட பாடு சொல்ல வார்த்தை இல்லை,வீட்டிலிருந்து கிளம்பும்போது நானும் அம்மாவும் மாத்தி மாத்தி,வெதும்புவோம். நாளடைவில் நான் தைரியமாகிவிட்டேன்,அம்மாவிடம் எந்த மாற்றமும் இல்லை,அம்மாவுக்கு ஆறுதல்,ஆலோசனை சொல்லவும் மன உந்தல் ஏற்பட்டது.அதற்குபிறகுதான் அம்மாவும் நானும் தாய் மகள் மட்டுமில்லாமல் தோழிகளாகவும் மாறினோம்!!....
                        வீட்டுக்கு வந்தால் அந்த  பேகை(bag) கொண்டு வந்து வைப்பதோடு சரி பிறகு சுத்தம் செய்வது  தேவையானவைகளை  வைப்பது ,வாங்கும் சம்பளத்துக்கு செலவில்லாமல் தேவையான  எல்லாம் பேக்கிங் செயத்டுவாங்க,நான்_விஜ் சாப்பிட  மறுப்பேன் அதற்காக அவ்ளோ வருத்தபடுவாங்க,அந்த வெள்ளந்தியான அன்பை எங்கு போய் தேடுவேன்???நான் 2005 ல்  சென்னையில் வேலை பார்த்தேன்,அப்போ கையில் மொபைல் கிடையாது வீட்டு போனுக்கு சதத் பூத்திலிருந்துதான் பேசனும்.என்னுடன் தினமும் பேச முடியலன்னு அம்மா மிகவும் வருத்த படுவாங்க,சில மாதம் கழித்து அம்மாவை என்னுடன் பத்து நாட்கள் தங்க வைத்திருந்தேன்,என் சக ரூம்மேட்சிடம் நல்லா பழகினாங்க,சமைப்பாங்க,அம்ம்மவுடன் கிண்டி பார்க்,காந்தி மீயுசியம்,அருகில் உள்ள கோவில்களுக்கு போனதை மறக்க முடியாது.



               அம்மாவிடம் எனக்கு பிடித்தவைகளுள் ஒன்று என் தோழிகள் அனைவரிடமும் எனக்கு இணையாக பழகுவாங்க,நல்லது,கெட்டதுகளுக்கு தோழிகள் வீட்டுக்கு போவது,ஏதாவது ஆலோசனைகள் சொல்வதற்கும்,பெறுவதற்கும் அம்மா தயங்க மாட்டாங்க.அம்மா எனக்கு மட்டும் தோழி  அல்ல,என் தோழிகளுக்கும் தோழிதான்.