Wednesday, October 14, 2015

அப்பா வாருங்கள் இங்கே

அப்பாவிற்கு இன்று (14/10/2015)
அப்பா மரணிக்கும் 2 நாள் முன் 
பிறந்தநாள்.(14/10/1953).
22/102013 அன்று அவர் உயிர் பிரிந்தது.
அப்பா மறைந்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ,எழுதுகின்றேன்.


இடைப்பட்ட நாட்களில் அப்பாவைப் பற்றி எழுத நினைத்ததையெல்லாம் நினைவுகளிலே கரைத்துவிட்டேன்.

ஊற்றெடுக்கும் கண்ணீரை உறைய வைக்கவும் பயிற்சியானது அப்பாவின் மரணம்.

மழலையில் ,ஆப்பி பத்டே தாத்தா என்று சொன்னதை மறந்தவள் ,தான் ஒரு முறை கூட தாத்தாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லவில்லை  என்கிறாள் என் 9 வயது மகள்.

மரத்துப்போன மனதிற்கு மகளின் கூற்று மெல்லிய உதையாகிப்போனது....