Sunday, January 2, 2011

.அம்மாவின் தன் சுவாச நாள்

ஏழாம் நாள் (ஜூன் 27 ) விடியற் காலையில் கதவு தட்டும் சத்தம் கேட்டு விழித்து கதவை திறந்தேன் என் தாத்தா வந்திருந்தார் .வந்தவர் கட்டிடமெல்லாம் இடிந்து விழுவது போல கனவு கண்டேன்,அதாம்மா பயந்தது போய் வந்தேன்னு அழுதார்,என் பாட்டி (அப்பாவை பெற்றவர்) மூன்று வருடங்களாக அவதிப்பட்டு இறந்து ஒன்பது மாதங்களாகிறது.அவருடைய இருத் சடங்கில் மருமகளான என் அம்மா எதோ எரு வைக்கும் சாங்கியம் செய்தபோது சுவற்றில் ஒட்டாமல் கீழே விழுந்து விட்டதாம்.அது அசுபம் என்று சொல்லப்பட்டது.என் அம்மாவிற்கு அந்த பயம் வந்துவிட்டது.மேலும் நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலுக்கு முடி கயிறு வாங்க பூசாரி வர சொல்லியிருந்த நாளும் அன்றுதான்.அன்று அம்மா முகத்தில் குழப்பம் கலந்த பயம் இருந்தது.வீட்டிலிருந்து கஞ்சி எடுத் வரவிருந்த அப்பாவை வேண்டாம்னு சொல்லிவிட்டு என்னிடம் பக்கத்திலிருக்கும் உணவகத்தில் தோசை வாங்கிட்டு வர சொன்னாங்க அம்மா .இத்தனை நாளுக்கு பிறகு அம்மா தானாக விரும்பி கேக்ராங்கனு எனக்கு பிடித்த பேப்பர் ரோஸ்ட் வாங்கி வந்தேன்.கால் பகுதி சாப்பிட்ட அம்மா இனி போதும்னுட்டாங்க,சரி இது சாப்பிட்டதே பெரிய விசியம்னு கட்டாயபடுத்தல.அப்பா எனக்கு சாப்பாடு வீட்டிலேர்ந்து எடுத்துட்டு வந்ததை சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு போய்ட்டுவறேம்மானு சொன்னேன். என் உடல் நிலை சரியில்லாமல் போனபோது அம்மா தன் ஆயுள் வரை வருடத்திற்கு ஒரு முறை (என் நலத்திற்காக )நெ.க.மாரியம்மனுக்கு அங்கப்ப்ரதட்ச்சனம் செய்வதாக பிராத்தனை செய்த்கொண்டதால் வருட வருடம் செய்வாங்க.இந்த வருடம் பாட்டி இறந்து விட்டதால் செய்யவில்லைன்னு சொன்னாங்க.நான் என் சொந்த காரணத்திற்காக நானும் அம்மா மாதிரியே வேண்டி கொண்டு வருடம் ஒரு முறை அங்கப்ப்ரதச்சனம் செய்வேன்.எனவே என் வேண்டுதலை அன்றே செய்துவிடுகிறேன்னு அம்மாவிடம் சொன்னபோது அதெல்லாம் சுத்த பத்தமா இருந்து செய்யனும் ,நீ மருத்துவமனியில் இருக்க அப்படி இப்படின்னாங்க.


                                     மேலும் நான் இனி இருந்து என்ன செய்யபோறேன்,என்னால எல்லோர்க்கும் கஷ்டம் ஏதாவது ஊசிய போட்டு கொன்னுடுங்கன்னாங்க.எனக்கு உண்மையில் கோபம் கலந்த வேதனைதான் இருந்தது.நாங்கலாமிருந்து என்ன செய்யபோறோம் நீ ஏம்மா இப்பிடிலாம் பேசுற உனக்கு ஒன்னுமில்லம்மானு சொல்லி,அப்பாவிடமும் சொல்லிவிட்டு குழந்தையுடன் கோவிலுக்கு சென்றேன்.அம்மனுக்கு பால் ,மாலை,வாசலில் விற்ற பெண்ணுருவ மண் பொம்மை,சில்வர் தகட்டாலான பெண் உருவம் நெய் விளக்கு ,மூன்று பெண்களுக்கு சுமங்கலி தான செட் இத்தனையும் வாங்கிக்கொண்டு கோவிலிலே தலை குளித்துவிட்டு குழந்தையயை என் பின்னாலே வர செய்து எனக்கான அங்கப்ப்ரதச்சன வேண்டுதலை நிறைவேத்திவிட்டு, வாங்கி வந்த பொருட்களை அம்மனுக்கு செலுத்திவிட்டு,சுமங்கலி தானம் செய்து விட்டு (எல்லாம் என் அம்மாவை அனுப்பத்தான் செய்தேன் போல) முடி கயிறு தருவதாக சொன்ன பூசாரியிடம் வாங்கிக்கொண்டு,என் மேல் குறையிருந்தால் எனக்கு மட்டும் தண்டனை கொடு அம்மாவை நால்லபடியாக காப்பாற்று என சொல்லி கிளம்பிய எனக்கு அம்மா இறந்து போன பாட்டியை பற்றி சொன்ன நினைவு வந்ததால் ஏதாவதி வயசான பாட்டிக்கு புடவை ரவிக்கை வாங்கி கொடுத்து நம்ம பாட்டியிடம் அம்மாவை எந்த குறையில்லாமல் காப்பற்றுனு வேண்டிக்குவோம்னு மனதில் பட்டது.அன்று ஞாயிற்றுக் கிழமையால் நாகை கடைத்தெரு பரபரப்பு இல்லாமல் பல கடைகள் மூடியிருக்க ஒரு திறந்திருந்த கடையில் காட்டன் புடவை ப்ளவுஸ் வாங்கிக்கொண்டு பக்கத்திலிருந்த மற்றொரு கோவிலுக்கு சென்றேன்.தெய்வாதீனமாக உள் நுழைந்தவுடன் முதலில் தெரிந்தவர் வயதான பாட்டி ஒருவர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.அவசரமாக சாமி தரிசனம் செய்துவிட்டு அந்த பாட்டியிடம் புடவையை என பாட்டியிடம் கொடுப்பதாக நினைத்து கொடுத்து,அம்மாவிற்காக பிரார்த்தனை செய்து கொண்டு அந்த பாட்டியின் முகத்தை பார்த்துக்கொண்டே கிளம்பினேன் .அம்மாவிடம் சென்று கோவிலிலிருந்து கொண்டு வந்த பிரசாதம் ,கொஞ்சம் பால் கொடுத்துவிட்டு அந்த முடி கையிற்றை எங்கம்மா கட்டனு கேட்டவுடன் அம்மா தன் மாங்கல்யத்தில் கட்ட சொன்னாங்க,முதன் முதலாக அம்மாவின் மாங்கல்ய செய்னை தொட்டு முடி கையிற்றை கட்டி விட்டேன். பூசாரி கொடுத்த எலுமிச்சம்பழத்தை வெட்டி கொஞ்சம் சாறு கொடுக்க முயன்றபோது எலுமிச்சம்பழம் கை தவறியது இதுலாம் மூட நம்பிக்கை என்றாலும் மீண்டும் எடுத்து அம்மாவாயில் ரெண்டு சொட்டு விட்டு தலை மாட்டில் வைத்துவிட்டு,அப்பாவிடம் டாக்டர் வந்து பார்த்தாரான்னு விசாரித்தேன்,இன்று சண்டே என்பதால் லேட்டாதான் வருவாராம்னு சொன்னாங்க,அப்பாவும் என்னை வீட்டுக்கு போக சொன்னாங்க,சரி அம்மாவை பாத்துகங்க பாப்பாவை வீட்டில் விட்டுட்டு மதியம் வர்றேன்னு படுத்திருந்த அம்மாவை எழுப்ப வேணாம்னு அம்மாவிடம் சொல்லாமல் வீட்டுக்கு கிளம்பினேன்.


                                 தாத்தா பாட்டி சாப்பாடு கொண்டு போக,அம்மா நீ வந்தாதான் சாப்புடுவேன்னு சொல்றாங்க,நீ உடனே வான்னு அப்பா போன் செய்தாங்க.எனக்கு அம்மா மேல் கோபம்தான் வந்தது. என்னவோ எனக்கு புத்தி கெட்டுத்தான் போனது.வீட்டிலிருந்து லேட்டாதான் கிளம்பினேன். என்னவோ எனக்கு போகும்போது அழுகையை அடக்க முடியல .வழி நெடுக அழுதுகிட்டேதான் போனேன்.மருத்துவமனை போன பிறகுதான் விபரம் தெரிந்து அழுவதை தவிர அம்மாவிற்கு தைரியம் சொல்வதை தவிர என்னாலும் யாராலும் ஒன்னும் செய்ய முடியல.
நான் வீட்டிற்கு போனவுடன் நடந்திருந்தது என்னவென்றால் தாத்தா அம்மாச்சி வந்தவுடன் பேசிக்கொண்டிருந்த அம்மா அம்மாச்சியுடன் பாத்ரூம் போயிட்டு திரும்பி வந்தவுடன் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.அப்பா டாக்டரை அழைத்து வந்து காமிக்க அவர் நர்சிடம் மூச்சுத் தினரளுக்கான ஊசி போட சொல்லியிருக்கார்,அந்த நர்ஸ் தூக்க ஊசியை போட்டிருக்காங்க.இதனால் அம்மாவின் நிலை மோசமாகி கண்களை விழித்து பார்க்க முடியாத நிலைக்கு போய்ட்டாங்க.பல்ஸ் குறைந்து விட்டது.அப்பா மீண்டும் டாக்டரிடம் போய் சொல்ல இப்பதான ஆச்தலின் ஊசி போட்டிருக்கோம் மெதுவாகத்தான் குணமாவங்கனு சொல்ல பக்கத்திலிருந்த நர்ஸ் தூக்க ஊசிக்கான எதோ ஒரு பேரை சொல்லியிருக்கு,டாக்டர் அப்பாவின் முன்னாடியே நர்சை திட்டி விட்டு அம்மாவை பார்க்க வந்துள்ளார்.வந்தவர் செக் செய்துட்டு அம்மாவை தஞ்சாவூர் ஹாஸ்பட்டளுக்கு அழைச்சுட்டு போக சொல்லிட்டாராம்.எங்க நாகையில் கிரிடிகல் கண்டிசனில் உள்ளவர்களை தஞ்சாவூர்க்கு அழைச்சிட்டு போக சொல்லிடுவாங்க(அந்த ஹாஸ்பட்டளிளிருந்து எங்கயோ போங்கனுடுவாங்க ).அப்படி போன கேசில் பத்துக்கு எட்டு பேர் பிணமாகத்தான் வருவாங்க,அம்மாவே எத்தனையோ பேர் மோசமான நிலையில் தஞ்சாவூர் போயிருக்காங்கன்னாலே திரும்ப வர மாட்டாங்கன்னு சொல்லியிருக்காங்க.அம்மாவிற்கு கண்ணை திறந்து பார்க்க முடியலையே தவிர நிதானமாதாநிருந்தாங்க. இந்த நிலையில் தான் அப்பா எனக்கு இன்ன விபரம்னு சொல்லாமல் உடனே வர சொல்லியிருக்காங்க.கூடவே அம்புலன்ஸ் மற்றும் பணத்திற்கும் ஏற்பாடு செய்திட்டுருந்த நிலையில் தான் நான் போகிருக்கேன். அப்பா மனமுடைந்து சொல்லியதை கேட்டு அம்மாவை ஓடி போய் பார்த்தேன் .இந்த உலகத்தில்தான் இருக்கிறேனா,என் கால் பூமியில் படுகிரதானு ஒன்னும் புரியல.அப்பாவின் நண்பர்களும்,அருகிலுள்ள சில உறவினர்களும்,என் வீட்டில் தங்கிக்கொள்ளுங்கலேன்று சொன்ன தோழியின் அம்மாவும் அருகிலிருந்தனர்.


                                    அந்த நிலையில் அப்பவோ வேறு யாருமோ டாக்டரிடம் சண்டைக்கு நிற்கவில்லை.அம்மாவிற்கு அப்போ மூச்சு திணறல் இல்லைனாலும்,கண்களை விழிக்க முடியலை,குரலை வைத்து விசாரிச்சு கிட்ட அழைத்து பேசினாங்க,நான் வாய் விட்டு அழுதால் அம்மா வருத்தபடுவாங்கனு குமரிக்கொண்டும்,வரும் போன் கால்களுக்கு வெளியில் சென்று அவசரமாக பதில் சொல்லிவிட்டு ஓடி வந்து அம்மவுடநிருந்தேன்.அம்மா என் சித்தியை அழைத்து நான் இனி இருக்கமாட்டேன் எல்லோரும் ஒற்றுமையா இருங்கன்னு என் பெண்ணை அனாதையாக்கிடாதிங்க,பாத்துக்னு சொன்ன போது எனக்கே மூச்சு நின்றுதான் போனது.என் தங்கையிடமும் அதையே சொன்னாங்க.என் தம்பியிடம் கெட்டிக்காரத்தனமா பிழைச்சுக்கொடனு சொல்லியிருக்காங்க.என்னிடம் அப்பா பாவம்மா,அப்பாவ பாத்துக்கன்னாங்க,ஏம்மா இப்படி சொல்ற உனக்கு ஒன்னுமில்லம்மா,மயக்கத்தில்தாம்மா உன் உடல் நிலை இப்படியிருக்குனு சொன்னேன். அப்பாவும் ஒன்னுல்ல மணி பயப்டாதனு அம்மா தலைய தடவினாங்க,அப்பாவின் உடம்பு நடுங்குவதையும்,அவங்களும் செய்வதறியாமல் தவிக்கிராங்கனும் புரிந்த்துது,


                              உடம்பு ரொம்ப வலிக்குதும்மானு சத்தமா சொன்னாங்க ,உடம்பெல்லாம் சில்லுனு ஆகிட்டு.அம்மா பிழைப்பாங்கனு நம்பிக்கையே போயிட்டு,மருத்துவ வட்டாரத்திற்கு தொடர்புடைய தோழி அன்று ஏற்பாடு செய்த ரேக்கமண்டேசன் கடிதத்தை விட்டு விட்டு இந்த மருத்துவமனைக்கு வந்து தப்பு செய்துட்டோமேனு ஓடி போய் அவருக்கு போன் செய்து எதாவது உதவும்படி(பத்து வருட நட்பில் முதன் முறையாக உதவி கேட்டேன்) கேட்டேன்.எனக்காக அவரும் மெனக்கிட்டு சில ஏற்பாடு செய்தார்.அதற்குள்ளும் அம்புலன்ஸ் வந்துவிட்டது.உடல் வலிக்காக ஊசி போட்டு அம்மாவை திருவாரூர் மருத்துவமனைக்கு போகிறோம்னு சொல்லி கிளப்பினோம்.(தஞ்சாவூர்னா அம்மா பயப்படுவாங்கனு )என் தாத்தா அம்மச்சியிடம் எல்லோருக்கும் நல்லதுதான செயதேம்ப்பா நான் எப்படி போறேன் பாருங்கன்னு சொல்லிகிட்டே கிளம்பிய அம்மா அம்புலன்ஸ்க்கு கூட கைத்தாங்கலாக நடந்து வந்தாங்க.ஆனால் அம்மாவின் பல்ஸ் குறைந்து கொண்டே வந்தது.சினிமா சீன போல அம்மாவை அம்புலன்சில் படுக்க வைப்பதற்குள் அங்கு பக்கத்திலிருந்த எதோ அம்மன் கோவிலில் விழானு வீதியில் தப்பு,வெடி சத்தமுடன் காவடி வருகிறது,நீண்ட கூட்டம் பாதி கலைந்த நிலையில் அம்மாவை அம்புலன்சில் ஏற்ற முயற்சித்தபோது அம்மாவே ஏற முயற்சித்தது கண்டு சந்தோஷப்பட்டேன்.ஏறியவர் முருகா முருகா நான் இந்த வண்டியிலா போகனும்னு சொன்னாங்க.நான், அம்மா,அப்பா,தங்கை,தங்கையின் கணவர் சென்றோம்(முதன் முதலாக அம்புலன்சில்) அப்பா அப்பானு என் தாத்தாவை பரிதாபமாக கூப்பிட்ட அம்மா எங்களிடம் நான் வண்டியில் ஏறியபோது தாத்தாவை பாக்கலன்னாங்க .அங்கதாம்மா நின்னாங்க நீ பேசாம வாம்மனு லேசாக கால்களை அமிக்கிவிட முயற்சித்தேன் .அம்மா கால் வலிக்குதுன்னு வேகமாக காலை உள்ளிழுத்துக் கொண்டாங்க. அம்புலன்ஸ் அலாரமுடன் ஒழி ரோட்டின் இரு புறமும் பாய்ந்து கொண்டு போவதை பாக்கும்போது எனக்கே பீதியாக இருந்தது.அம்மாவை மறுபடியும் வீட்டுக்கு அழைச்சிட்டு வந்திடுவோம்மாப்பானு கேட்டபோது அப்பா பரிதவிப்புடன் என் கைகளை இருக்க பிடித்து தன் மடியில் ,பல வருடங்களுக்கு பிறகு அம்மாவின் இப்படியொரு நிலையில் அப்பாவின் தொழிலும், மடியிலும் படுத்து வந்ததை மறக்க முடியாது,கூடவே என் தோழியும் அவரது கணவரும் ரேக்கமன்தாசன் உதவிக்குண்டான பெயர்கள் இடங்களை போனில் சொல்லிக் கொண்டே வந்தாங்க.என் தோழி எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை நான் உன் அக்கௌண்டில் பணம் போடுகிறேன்.அம்மாவிற்கு பூரண மருத்துவம் செய்யுங்களன சொன்னாங்க.(உறவினர்கள் கூட அப்படியொரு வார்த்தையை சொல்லவில்லை)நீண்ட நேரம் பயணிக்கவே அம்மா இன்னமுமா திருவாரூர் வருதுன்னு கேட்டாங்க,இன்னும் கொஞ்ச நேரத்தில் போயிடுவோம்னு சொல்லி தஞ்சாவூரின் பிரபல மருத்துவமனைக்கு செல்ல,ரேக்கமண்டேசன் பற்றி சொன்னதே எங்களுக்கு எதிரானது.அம்மாவிற்கு நுரையீரல் ப்ராப்ளமுனு சொல்லப்பட்டிருக்கு,அதற்கான டாக்டர் ஊரில் இல்லை(பொய் சொன்னார்கள்,டாக்டர் மருத்துவமனையில் தான் இருந்துருக்கிறார் ),பல்ஸ் கம்மியாக உள்ளது உடனே வேற மருத்துவமனைக்கு போங்கன்னு சொன்ன போது ஏண்டா நம்ம உயிர்லாம் இன்னுமிருக்குனு எல்லோரும் நினைத்தோம்.மீண்டும் தோழியிடம் போனில் விபரம் சொல்ல அவர் அருகிலுள்ள மற்றொரு பிரபலமான மருத்துவமனைக்கு வழிசொன்னார். வெளிக்காற்று பட்டதாளோ என்னவோ அம்மாவிற்கு பல்ஸ் குறைந்துட்டு,குறைந்துட்டுன்னு சொன்னாலும் அம்மா தெளிவாக பாத்தாங்க,பேசினாங்க.


                                   அடுத்த மருத்துவமனையில் சேர்த்த போது நைட் டுட்டியில் வந்து பார்த்த டாக்டர்(மது பான வாசனை)icuவில் அட்மிட் பன்னுவோம்,உயிரோட வந்தாலும் வராட்டாலும் பரவாயில்லைனா அட்மிசன் போடலாம் இல்லேன்னா அழைச்சுட்டு போயடுங்கனு சொன்னதை கேட்டு ஆடி போய்விட்டோம்.ஒத்துக்கொண்டோ அப்பா கை எழுத்திட்டு அம்மாவிற்கு மருத்துவம் தொடங்கப்பட்டது.என்னை பார்த்து பார்த்து வளர்த்த அன்பான கைகளில் ஒரு மாத காலமாக அத்தனை ஊசிக் குத்திய பொறிகள்(தழும்பு).வெளி வார்டில் வைத்து ப்ளட் டெஸ்ட் எடுத்தவுடன் icu வில் வைக்கப்பட்ட அம்மா என் தங்கையை அழைத்து (எங்க மாமா ஒருவர் ரெண்டு ஆண்டுகளுக்கு முன் கிட்னி பாதிப்பால் icu வில் வைத்தபின் இறந்தார் அதே ஜூன் மாதம்) அந்த மாமா மாதிரியே என்னையும் வச்சுடாங்கனு சொன்னாங்க.நீ பேசாம அமைதியா இரும்மானு சொன்னோம்.அப்பவோ உள்ளே வந்து அம்மாவை பாக்க வர மாட்டேனுட்டார்.நான் கட்டாய படுத்திய போது அந்த கொடுமைய என்னால பாக்க முடியாதும்மனு அழுதாங்க.அம்மாவிற்கு ஆக்சிஜன் வைக்கப்பட்டது.பொதுவாக icuவில் உடனிருப்போரை கூட தொடர்ந்து அனுமதிக்க மாட்டாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்,ஆனால் அங்கு யாரவது ஒருவர் கூடவே இருங்கன்னு சொன்னது பெரிய பாக்கியம்னு நினச்சு அம்மாவுடனிருந்தேன்.டாக்டரிடம் என்னால் முடிந்தளவு எனக்கு தோன்றிய சந்தேகமெல்லாம் கேட்டேன் அவரும் பொறுமையாக பதில் சொன்னார்.மேலும் மானிட்டரில் பல்ஸ் ரேட் 80,90 காமித்துகொண்டிருன்தது.100 அல்லது அதற்கு மேல் வந்தால் நார்மல்னு சொன்னார்.அந்த மாஸ்க்கை எடுத்துவிட்டு தண்ணீர்,பால் கொடுக்கலாம்னு சொன்னார். மேலும் நாங்க கொண்டு போன ஸ்கேன் ரிப்போர்ட்டில் உள்ள படி டிபி அட்டாக்லாம் கிடையாது ,லங்சில் பங்கஸ் படிந்த மாதிரி இருக்கு,பொழுது விடந்தவுடன் இந்த ஸ்கேன் ரிப்போர்ட்டை பக்கத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் காமித்து டீட்டைலான ரிப்போட் வாங்கிட்டு வாங்க,நாங்க எல்லாம் செய்வோம்,பெசன்ட்க்கு உடல் தாங்கணும்னு சொன்னார்.நாங்க வேதனையில் பூமியில் உருண்டு பெரண்டு அழாத குறைதான்.நாங்கள் இப்படியிருக்க நைட் டுட்டி பாக்கும் நர்ஸ்கள் தூக்கத்தில் இருப்பதும்,நாம் ஏதாவது கேட்டால் சரியாக ரச்போன்ஸ் பன்னாமளிருப்பதும்,நம் காது பாட சொந்தக் கதைகளை பேசிக் கொண்டிருப்பதும் என்னை எரிச்சலுட்டியது




                                 எக்ஸ்ரே மெசின் உள்ளே கொண்டு வரப்பட்டு எக்ஸ்ரே எடுக்கும்போது தாலி செயினை கழற்ற சொன்னாங்க,எங்க உதவியுடன் கழற்றிய அம்மா மீண்டும் போட்டுக்க ஆசை பட்டாங்க ,அப்பாவே அணிவித்து விட்டால் இன்னும் சந்தோஷப்படுவாங்கனு அப்பாவ போட்டு விட சொன்னோம்.அப்பாவின் கைகளால் அம்மா சந்தோஷமா போட்டுகிட்டாங்க. நான் அம்மாவுடனே இருந்தேன் அம்மா விழித்த வண்ணமே இருந்தாங்க.அம்மா ரெஸ்ட் எடுக்கனும்மா.சற்று கண்ணா மூடி தூங்கும்மன்னு சொன்ன பொது,எனக்கு இங்கிருக்கவே பயமா இருக்கு எப்ப வெளி வரதுக்கு கூட்டிட்டு போவாங்கனு கேட்டாங்க,மத்தியானம் போயடலாம்மா,நீ எதையும் போட்டு குழப்பிக்கதானு அம்மா அருகிலிருந்த ஸ்டூலில் உக்காந்து அம்மாவின் கையருகில் தலை வைத்து படுத்த நான் அசதியோ என்னவோ தூங்கிவிட்டேன்,எதோ டிஸ்டபன்சாக விழித்த எனக்கு அம்மாவின் கை என் தலையை தடவி கொண்டிருப்பதை உணர்ந்து அம்மாவின் கையை பிடித்து அழுதேன்.அம்மா ஏண்டா அழறனு பரிதாபமா கேட்டாங்க,இடையில் வந்த நர்சிடம் அம்மா இது என்ன ஊர்னு கேட்க அவர் தஞ்சாவூர்னு சொல்ல அம்மாவிற்கு பயம் ஏறியது,பத்து ரீடிங்களவும் குறைந்தது ,இந்த ரீடின்களவு எந்தளவுக்கு உண்மை,சரின்னு தெரியாது.நானும் அவ்வபோது வந்த போன் கால்களை அட்டன்ட் செய்ய பேசுவதற்காக வெளியில் வந்து பேசிட்டு போனேன்.என் மன ஆறுதலுக்காக என் கணவர் மற்றும் சிலரிடம் அம்மாவின் நிலை பற்றியும் சொல்லி அழுது கொண்டிருந்தேன்.உள்ளே வந்தவுடன் ஏன் ஆச்சி விட்டுட்டுவிட்டுட்டு போற.நீ என்கூடவே இரும்மன்னங்க.சற்று நேரம் அம்மாவுடனிருந்தேன்.பிறகு அப்பா எங்கன்னு வெளியில் போய் பாத்துட்டு வரேன்னு அம்மாவிடம் சொல்லிட்டு வந்தேன்.வெளியில் வந்து அப்பாவை தேடி பாத்தா நான் அப்பாவின் நிலை கண்டு நொறுங்கி போனேன்,அப்பா தரையில் ஒரு ஓரமாய் வழிபோக்கர் போல கவிழ்ந்து படுத்திருந்தார் .அப்பாவை எழுப்பி பேசினேன்,அவரால் எதுவும் சொல்ல வார்த்தை வரல,முகமும் அவருடையதாகவே தெரியல,அப்பா என்னிடம் உன் கணவரை பிளைட் புக் செய்து கிளம்பு சொல்லுனார்,இல்லப்பா அம்மா நல்லாயிடுவாங்க.அம்மா நல்லானவுடன் அவருக்கு சொன்னால் போதும்னேன்,அப்பா எழுந்து போய்ட்டாங்க.அம்மாவை வந்து பாருங்கன்னு சொன்னதற்கு என்னக்கு உள்ள போனாலே உடம்பெல்லாம் நடுங்குதும்மா,நீயே கிட்ட இரும்மான்னங்க.























No comments:

Post a Comment