Thursday, December 23, 2010

அம்மாவின் மண்ணுலக பிரிவு

அம்மா அம்மா என்று கதறி அழ விரும்பும்
 மனதை கட்டுப்படுத்தியவளாய்
பிறப்பென்றால் மரணமும்
வந்தே தீருமேன்றாலும்
புல் பூண்டுகளையும்
விலங்குகளையும் விட
பாக்கியம் பெற்றவர்கள்
மனிதப் பிறவிகள்
என்றிருந்தேனே!
உன்னை பிரிந்தவுடன்
மரணிக்கவே பிறக்கிறோம்
இடையில் ஏனிந்த   நவரசங்கள்
புல் பூண்டுகளே ! நீங்கள்தான்
பாக்கியம் பெற்றவர்கள்
என் சுக துக்கங்களை
பகிர உனக்கு
நிகர் நீயேதானம்மா!..
நீ இல்லாத இவ்வுலகில்
எத்தனை உறவுகளுடன்
சுகங்களுடனும்
வாழ்ந்தாலும் இனி என்
வாழ்க்கை உப்பில்லா
விருந்துக்கு இணையம்மா!
என் ஜனனத்திலேர்ந்து என்
மகள் ஜனனம் வரை  எத்தனை
பூரிப்புடனும்,பொறுப்புடனும்
சேவைகள் செய்த உனக்கு
பதில்  சேவைகள் செய்ய கூட
அவகாசமில்லாமல் அவசரமாய்
அரை நூற்றாண்டு வாழ்ந்தது
போதுமென காலன்
அழைத்து போய்விட்டானேயம்மா!
உயிர் பிரியப்போகிரதேன்று
தெரிந்தவுடன்  என்னை
எப்படியாவது காப்பாற்றுங்களேன
சொல்லாமல்,உறவுகளை
அழைத்து ஒற்றுமையாக
இருங்கள் என் பெண்ணை
பாத்துக் கொள்ளுங்கலேன்று
சொன்னாயேயம்மா !அவசர ஊர்தியில்
செல்லும்போது 'நான் யாருக்கு
என்ன பாவம் செய்தேன்,எனக்கேன்
இந்த நிலையென'உன் கண்கள்
பேசியதை உணர்ந்தேனே அம்மா !! 
கடைசி  பதினெட்டு  மணி  நேரங்கள்
அவசர  சிகிச்சை பிரிவிலிருந்தும்
முழு நிதானமுடன் பேசிய நீ
கடைசி ஐந்து நிமிடங்களில்
அமைதியாக உயிர் நீத்தாயேம்மா!
எதுவும் செய்ய இயலாதவளாய்
உயிர் நீத்தலின் அசைவென்று
தெரியாமல் உன் கடைசி
அசைவையும் விரக்தியில்
வேடிக்கை பார்த்தேனேம்மா!
விபத்துக்குள்ளாகியோ,
புற்றுக்கட்டியிலோ அவதிப்
பட்டிருந்தால் கூட உன்
பிரிதலில் நியாயமுண்டு
என்ன மாயமென்று
மருத்துவருக்கும்
புரியவில்லை,எங்களுக்கும்
தெரியவில்லை,மக்கள்
நிரம்பி வழியும் உலகில்
உன் ஒரு உயிருக்கு
இடமில்லையேம்மா!
நீ இன்னமொரு நான்கைந்து
ஆண்டுகள் ஜீவித்திருந்தால்
கூட என் மனம் ஆறுதல்
பட்டிருக்குமேம்மா!உன்
மன உளைச்சலுக்கு
மரணம்தான் விடிவா?
உன்னை கண்ணீரீனால்
அழிக்கமுடியாமல்
தீயினால் அழிக்கவைத்து
விட்டானேயம்மா!உனது
தாய் தந்தைக்கு செய்யவிருந்த   
கரும காரியங்களை  
ஏற்றுக்கொள்ள  தகுதி
இல்லாதவர்கலேன்றா
அவர்களை உனக்கே காரியம்
செய்ய வைத்துவிட்டாய்! 
 எனக்கு தண்டனை உன்
மரணம்தானா?
நீ உயிர் நீத்ததையும்
கடைசியாக உனக்கு
பட்டு சேலை உடுத்தி,
நகைகளும்,பூ மாலைகளுமாக
மங்களகரமாக படுத்திருந்த
உன்னை உத்து பார்த்து
அழவா என்னை இத்தனை
ஆண்டுகள்  பாதுகாத்து  வளர்த்தாய்?
எத்தனை ஆண்டுகள் எனக்கு
தலை வாரி அழகு பார்த்திருப்பாய்!
கடைசியாக நான் பின்னிவிட்ட
பின்னலுடன்  அம்மன் சிலை போல
அபிசேகித்து  நீராட்டியதை
பார்த்து வெதும்பியவளாய்
உனக்கு கடைசிக் காரியமும்
செய்துவிட்ட எனக்கு  
வரப்போகும் மரணமோ
ஏதேனும்  துயரமோ
ஈடாகதம்மா!இனி நான் யாரை
அம்மானு அழைத்தாலும் உன்னை
வாய் நிறைய அம்மா அம்மானு
அழைத்ததற்கு ஈடாகாதம்மா!
ஓசையுடன் அவசர
ஊர்தி சென்றாலே,யாருக்கு என்னாகப்
போகிறதோ யார் என்ன வேதனை
படுகிறார்கலோனு மனம் கணக்கிறதம்மா!
பேத்தி வளருவதையும்,பேசுவதையும்
பார்த்து,கேட்டு சந்தோஷப்பட்ட
உன்னை நினைத்து அழும்போது
மூன்றரை வயதான உன்  பேத்தி
'மணி  போட்டோவில் நம்ம வீட்டில்தான
இருக்கு நீ ஏம்மா அழுகிறனு'
சொல்லும்போதும்,எதாவது யோசித்து
அமர்ந்திருந்தாலும்,முகம் சோகமானாலும்
மணிய பாத்து அழுகப் போறியாம்மானு ?
கேக்கும் உன் பேத்திக்கு
என்ன பதில் சொல்வேனம்மா!
நீ வாங்கி கொடுத்த பொருளெல்லாம்
இருக்க,உன்னை பரி கொடுத்துவிட்டு  
 நான் யாரை
நினைத்து வேதனைப்படுவேனம்மா ?
நான் அம்மவாகிவிட்டாலும்
உயிருக்கு உயிராய் என்னை
நேசித்த என் அன்பான
அம்மா இன்மையினால் 
ஏங்குகிறேனேம்மா  !  
இணையத்தளம் பற்றி எனக்குத்  
தெரிந்தவற்றை   விளக்கியபோது
'ஒன்னும் புரியல போம்மா  'என்று 
வெள்ளந்தியாய் சொன்ன உன்னை    
உயிர்களை கொள்ளவே பிறந்த
மரண ஜந்து உன்னையும்
கவ்விக்கொண்டுப் போன
     ஆதங்கத்தில்
இந்த பூமியில் வாழ வழி செய்து
தந்த உன்னை, உன் நினைவுகளை
 இணையதளத்திலே பதிவு 
செய்துருக்கிறேனம்மா!!!  





     

Sunday, December 19, 2010

என் குழந்தையுடன் அம்மா

                   அம்மாவின்   உலகத்தை   மாற்றியவர்   என்   மகள்தான். நான்   பெற்றேடுத்தேனே    தவிர   மனதாலும், போனிலும், நேரிலும்  வளர்த்தவர் என் அம்மாதான். என் கணவரும் தன்   அளவிற்கு அன்பும், அக்கறையுமாக   குழந்தையிடம்   உள்ளார்   என்பதில்   அம்மாவிற்கு   தனி தெம்புதான். என் அப்பாவிற்கு என்னை  மீண்டும் மகளாக்கியவரும் என்  மகள்தான்.கரு உருவானபோது  நானும் அம்மாவாகி எப்படி வளர்க்கப்போகிறேன் என்று நினைத்ததெல்லாம் தேவையில்லாத பயமேன்ரும்,எனக்கொரு குழந்தை வராமல் போகியிருந்தால் என் வாழ்க்கையே அர்த்தமில்லாததாகியிருக்குமென உணர்த்தியவரும் என் குறும்பான  மகள்தான்.
                                  
              அம்மா முதன்  முதலில் குழந்தையயை என்னிடம் எடுத்துக் கொடுக்கும்போது என்னைவிட அம்மா முகத்தில்தான் அதிக பூரிப்பு,சிசரியனாலும்,தாய்ப்பாலின்மையாலும் ,முதல் உணவாக குழந்தைக்கு குளுக்கோஸ்தான் கொடுக்கப்பட்டது,அம்மாவிற்கு ஆயிரம் சந்தேகம்,தொடர்ந்து குளுக்கோஸ் கொடுக்கலாமா,பால் பவுடர் கொடுக்கலாமா,தாய்ப்பால் எப்போது கிடைக்கும்,என்ன செய்ய வேண்டும் .......,என அம்மா நர்சிடம்  குடைந்தெடுக்க, நர்ஸ்  கடுப்பாகி  பால் பவுடர் கொடுக்க சொல்ல,உடனே அம்மா பால் பவுடர்  வாங்க கடைக்கு சென்ற அம்மா பதட்டத்துடன் வந்து சொன்னது 'ஆச்சி குழந்தையையை பத்திரமாக பார்த்துக்கோ,பத்தரை மணிக்கு மேல் ஆகிவிட்டதால் ஹாஸ்பிட்டல் வெளி கேட் லாக் செய்துட்டாங்க,நர்ஸ் எங்க இருக்காங்கனு பாத்து, கேட் திறப்பாங்கலானு விசாரிச்சுட்டு வரேன்னு' தவிப்புடன் போனாங்க.மாடிக்கும்,கிரவுண்ட் ப்லோற்கும் நடந்து தேடி விசாரிச்சவருக்கு பதில் வெளியில் செல்ல அனுமதி கிடையாதுன்னு வரவே அம்மாவுக்கு மனம் மட்டுமல்ல,முகமும் வாடிவிட்டது.என்னருகில் குழந்தை கதரிகொண்டிருக்க எனக்கு அம்மா மற்றும் குழந்தையின்  முகங்களை வேடிக்கைதான்   பார்க்கமுடிந்தது .
சில  நிமிடங்களில் நர்ஸ் ரூமிற்கு வந்து விசாரிக்க,இப்போதைக்கு குளுக்கோஸ் கொடுங்க அல்லது பக்கத்தில் யார்கிட்டயாவது பால் பவுடர் இருந்த வாங்கி கொடுங்கனு நர்ஸ் சொன்னவுடன் அம்மாவிற்கு ஆத்தாமை தாங்கல,முதன் முதலில் தர வேண்டியதை பால் பவுடரை கூட கடன் வாங்கனுமா,நான் வாங்கமாட்டேன் நீங்க கேட்ட திறங்க,டாக்டர   கூப்பிடுங்கன்னு அம்மா ரெண்டு நிமிடத்தில்  சுய நினைவே இல்லாதமாதிரி கத்த ஆரம்ச்சிடாங்க,பிறகு அந்த  நர்சே எங்கிருந்தோ பால் பவுடர் எடுத்து வந்து அம்மாவை விளக்கிட்டு சிரஞ்சி மூலமா கொடுத்தாங்க,அம்மாவுக்கு ஒரு பக்கம் வருத்தமிருந்தாலும்,அழுகையை நிறுத்திய குழந்தையை பரிதாபமாக பார்த்து கண்ணீர் விட ஆரம்ச்சிடாங்க,அம்மாவின் அந்த நிலை பிரசவ வேதனையை விட மேலாக எனக்கு பட்டது .
             
           இரவில் அம்மாவிற்கு தூக்கமே வராது,வந்து வந்து குழந்தையை   பார்த்துட்டு போவாங்க,நீ தூங்கு அச்சி நான் பாத்துகிறேனு சொல்வாங்க,பகல் நேரத்தில் என் கணவரும் வீட்டுக்கும்,ஹாஸ்பட்டளுக்கும் வந்து போய் மிகவும்   உதவியாக இருந்தார்.இத்தனை அக்கறையான அம்மா இருந்தாலும் என் கணவர் என்னுடன் இருக்கும்போது மட்டுமே  முழுமையாக உலகில் இருக்கிறோம் என்பது போல என்னால் உணர முடிந்தது.
                                   
                 எதுவும் அறியாத பச்சிளம் குழந்தையயை நாம்தான் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டுமென்ற உணர்வு எனக்கு இருந்தால் கூட,என் அம்மா இல்லாமல் அந்த குழந்தை எனக்கு கிடைத்திருந்தால் என் குழந்தையின் நிலை பரிதாபமாகத்தான் போகியிருக்கும்,ஏனென்றால் அம்மா அந்தளவுக்கு    குழந்தையின் மீது கவனம் செலுத்தினாங்க,ஓஹோ ! குழந்தையயை இப்படியெல்லாம் பத்திரமாக பாத்துக்கனுமா,அம்மா என்னையும் இப்படிதான பார்த்து வளத்திருப்பாங்கனு  நினைத்துக்கொள்வேன்,   
            ஒரு குழந்தை பிறக்கும்போது அம்மாவும் கூடவே பிறக்கிறாள் என்பது எனக்கும் பொருந்தியது,கூடவே என் அம்மா மீண்டும் தாயானார் என்பதுதான் எனக்கு புலப்பட்டது.
             ஒவ்வொரு முறையும் பயமுடன்,பார்த்து பார்த்து குழந்தையயை தூக்குவதும்,அதன் அசைவுகளும்,அழகாக தூங்குவதும் , அழுவதும்,கண்களை விளித்து  பார்க்கத்   தெரியாத நிலையில்   கூட அழகாக சிரிப்பதும் ,குறிப்பாக தூக்கத்தில் சிரிப்பதும்  குழந்தைக்கு நிகர் வேறதுமில்லை.என்னை மிக வியக்கச்  செய்தது சில முறை   அம்மா உட்பட யார் தூக்கினாலும்  அழுகையை நிறுத்தாத குழந்தை என்னிடம் வந்தவுடன் அழுகையை நிறுத்தி விட்டது."பாத்தியா அம்மாவை எப்படி கண்டுபிடிக்குது பாத்தியானு " எல்லோரும் ஆச்சரியப்படுவாங்க.
                             
              ஒன்பது நாட்கள் ஹாஸ்பட்டல் வாசம் முடிந்து வீடு திரும்பினோம்.ரெண்டு நாட்களில் கணவர் வட இந்தியாவிற்கு புறப்பட்டார்.கண்ணை கட்டி காட்டில் விட்டது போல என்பதற்கு அன்று அர்த்தம் உணர்ந்தேன்,போனில் பேசப்போறோம்,மறுபடியும் சந்திப்போம் என்றாலும் அன்றைய பிரிவு கையில் குழந்தையுடன் ரண வேதனைன்னு சொல்றதை தவிர வார்த்தை தெரியல.அம்மாவிற்கு லேசான வருத்தம் கூட நாங்கள் இத்தனை பேர் இருக்க,கவனிக்க ஆளில்லாதது   போல அழுகிறியேனு   சொன்னாங்க..அம்மாவிற்கு என் வேதனை புரிந்தாலும் என்னை சமாதானபடுத்த வேறன்ன  சொல்ல முடியும். பிறகென்ன மனதை தேற்றிதானே ஆகவேண்டும் 
                            
            என் வீட்டில் ஒரு சின்ன ஜீவன் வந்ததில் எல்லோரிடமும் சின்ன மாற்றம்,புதிய அனுபவம்,தம்பி,தங்கையிடம்  கூட  சின்ன ஜீவனை கவனித்துக் கொள்வதில் அக்கறையை பார்க்க முடிந்தது,அப்பாவோ சுத்தமாக மாறிவிட்டார்,சொல்லப்போனால் அப்பாவும் குழந்தையாகவே மாறிவிட்டார்.ஒவ்வொரு நாளும் குழந்தையின் முகத்தில் மாற்றங்கள்.இதுதான் குழந்தையின் முகம் என ஞாபகம் வைத்துக்கொள்ளவே சிரமம்,தினமும் மாற்றங்கள்.குழத்தைக்கு காப்பிடுதல்,பெயர் வைத்தல் எல்லாம் அப்பா சுற்றம் சூழ  சிறப்பாகவே நடத்தினாங்க. அதிகம் கோவிலுக்கு போகாத அப்பா குழந்தையயை முதன் முதலாக கோவிலுக்கு  அழைத்துச் சென்ற போது அப்பாவும் வந்தாங்க,அத்தனை மாற்றங்கள்.(ஆனாலும் அம்மா நோகும் படியான சின்ன  சின்ன  சங்கடங்கள்)
                           
          அம்மா குழந்தையயை குளிக்க வைப்பதும்,மருந்து கொடுப்பதும்,அழகழகான ட்ரஸ் போட்டு பார்ப்பதும்,வீட்டு  வேலைகளுக்கிடையில் வந்து குழந்தையிடம் கொஞ்சி செல்வதும்,வேலை முடிந்தவுடன் அருகிலே அமர்ந்து ரசிப்பதும்,குழந்தைக்கும் எனக்கும்  என்னென்ன செய்யனும் செய்யக்கூடாதுனு அக்கம் பக்கத்தாரிடம் விசாரித்து  தேவைகளை பூர்த்தி செய்வதும்,தடுப்பு ஊசி போட நீ வீட்ட்லே இரும்மான்னு  தானே குழந்தையயை தூக்கிட்டு  போயிட்டு வந்ததும்,நான் வ.இந்தியாவிற்கு சென்றால் தனியாக குழந்தையயை கவனிக்க வேண்டும்,அதற்கான இன்சற்றக்சன்சகளும்,{அசந்து தூங்கிடாத,எந்த வேலையானாலும் குழந்தை  கவனிப்புக்கு பிறகு செய்,குழந்தைக்கு விவரம் தெரியும் வரை நாம் எதுக்கும் அலுப்பு படாமல் கவனிக்கணும்,கண்டத சாப்பிட கொடுக்காத, காரம்,புளிப்பு அதிகம் சேர்த்துக்காத,கண்டவைகளை குழந்தை வாயில் வைக்காமல் பார்த்துக்கோ,மருந்துகள்;,துணிகள், கனமான பொருட்களை குழந்தைக்கு எட்டும் தூரத்தில் வைக்காத,யூரின் பாஸ்களை அடிக்கடி செக் செய்,சளி பிடிக்கமால் பார்த்துக்கோ,அக்கம் பக்கத்தினரிடம் கேப்பதை விட அருகிலுள்ள தமிழ் குடும்பத்தினரிடம் ஆலோசனை கேட்டுக்கோ,குழந்தைக்கு எதாவது சிரமம் என்றால் உடனே மருத்துவரிடம் போ,,,,,.....இத்யாதி, இத்யாதி....}அந்த விலை மதிப்பில்லாத அன்பை எனக்கும் என் குழந்தைக்கும் யாராலும் தர முடியாது. 
                      
        வீட்டிற்கு  அருகில்  விநாயகர் கோவில் ஒன்று உள்ளது.அம்மாவிற்கு பெரிய ஆறுதலானவர அந்த விநாயகர்தான்.தினமும் தோட்டத்தில் உள்ள செம்பருத்தி பூக்களை மாலை தொடுத்து அவருக்கு அணிவித்த     பின்தான் அம்மா காலை உணவே சாப்பிடுவாங்க,வேறதுவும்  வேலைன்னா  மத்தியம் வெயில்  கூட பார்க்காமல் விநாயகர் கோவிலுக்கு போயிட்டு வருவாங்க,அம்மாவிற்கு அடுத்த ஆறுதல் தையல் மெசின்,வீட்டுக்கு மட்டும் தைப்பார்கள்,எனக்கு எத்தனையோ சுடிதார்,ப்ளவுஸ்,குழந்தைக்கு  எத்தனையோ ட்ரஸ் தைத்து தந்திருக்காங்க.
                        
            நாட்கள்  ஓடியதே தெரியவில்லை,மூன்றரை  மாதங்களுக்கு பிறகு வ.இந்திய புறப்பட தயாரானோம்,அந்த பிரிவு அம்மாவால் ஜீரணிக்க முடியவில்லை எனினும் மகளின் வாழ்க்கை கணவருடன் சேர்ந்து வாழ்வதுதானே நீதி,அதை மனதில்   வைத்துக்கொண்டு அம்மா  வழியனுப்பினார்,வீட்டில் அனைவருக்கும் நாள்தோறும் நம் கண்முன் வளர்ந்த குழந்தை புறப்படுவதில் வருத்தம்தான்,எனக்கு தாய் வீட்டு  சூழலை மிஸ் பன்னுகிறோம்னு வருந்தினாலும்,நமக்கு பாலமாக போன் இருக்குதேன்னு அம்மாவுக்கும் ஆறுதல் சொல்லி கிளம்பினேன்,அப்பா தன் பங்கிற்கு ஒரு அப்பாவாக 'உன்னை பார்த்துக் கொள்ளவே ஒரு ஆள் வேணும் ஆனால் நீதான் இனி குழந்தையையும்,கணவரையும் கவனிச்சக்கணும்  ,குழந்தைதனமா  இருக்காத ,கணவர்  சம்பாரிப்பதில்  சிக்கனமாக  இரு ,எங்களுக்கு பிறகு உனக்கு கணவரும் அவரின் சுற்றங்களும் உன்னுடயவாக  நினைத்து செயல்பாடு'.... ,,,,,.....இத்யாதி, இத்யாதி..கணவர் வந்து அழைத்துச்  சென்றார்.அழைத்துச் செல்ல வந்தவருக்கு  குழந்தையை  பார்த்த  போது அவரால் நம்பவே முடியல,பதிமூணு நாள் குழந்தையில் பார்த்தவர் இப்போ மூன்று மாத குழந்தையாய்   நல்லா வளர்ச்சி,தானே திரும்பி படுத்துக்கொல்லுமலவிற்கும்,நம்முடைய அசைவகளுக்கு ரச்பான்ஸ் செய்கிற,நன்றாக முகம் பார்த்து சிரிக்கிற,தானாக ஆஹ,ஓஹ் ,இக்ஹ ,ஹா  னு சிலாகிக்ற குழந்தையயை பார்த்து அவருக்கு மிக ஆச்சர்யம் ,
                         
             எப்போதும் மாமியார் வீட்டிலிருந்துதான் வ.இந்திய புறப்படுவோம்,அம்மா தன் வீட்டிலிருந்து வழியனுப்பியதில்   திருப்தி இல்லாமல்    மாமியார் வீட்டிலிருந்து   புறப்படும் கடைசி   நாளன்றும்      மாமியார்    வீட்டுக்கு வந்து வழியனுப்புவாங்க ,,மாமியார் வீட்டிலும்   தன் வீடு போலவே  வேலை  செய்வாங்க ,பேகிங்  செய்து தருவாங்க ,வீட்டை விட்டுச்   செல்லும்போது நானும் சிறிது நேரம் வழியில் அழுதுகொண்டேதான் போவேன் எங்களை  அனுப்பியபின்   மனதார  தனக்குதானே   அழுவாங்கலாம்   மாமியாரின்  சுற்றத்தார்  சொல்வாங்க  ,போனில்  " எம்மா  இப்படி  அழுதியாம்மானு  " கேட்டால்     அதெல்லாம்   ஒண்ணுமிள்ள   நீ   எதுவும்    தப்பா  நினைக்காத  , வருத்தபடாத,
என்னால தாங்கமுடியல ஆச்சி,ரெண்டு நாட்களில் நான்  சரியாகிவிடுவேன் ,நீ குழந்தையயை  பத்திரமாக  பார்த்துக்கோ ,கணவருடன்  நல்லபடியாக  வாழவேண்டும்,அதுதான்  எங்களுக்கு  பெரிய சந்தோஷம்னு சொல்வாங்க.
                        
                   பிறகு மூன்று மாதங்களில் அம்மாவையும்,மாமியாரையும் வ.இந்தியாவிற்கு அழைத்து வந்தோம்,முதன் முதலாய் வந்தவர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட   மனிதர்களும்,கலாச்சாரங்களும் வியப்பிலும்,சில சம்பவங்கள் நகைப்பிலுமாக எப்படியோ ஒரு மாதம் தங்க வைத்து அனுப்பினோம், சுற்று வட்டாரத்தில் உள்ள ராஜ் காட்,செங்கோட்டை ,அக்சர்தாம்,லோட்டஸ் டெம்பிள்,பாலிகா பஜார்,உள்ளூர் பஜார்களுக்க் அழைத்துச்சென்றோம்,இருவருக்கும் அவரவர் பிள்ளைகளுடனும்,பேத்தியுடனும் புதுமையான சூழ்நிலையில் நாட்களை கழித்ததில் சந்தோஷம்தான்.இங்கு வந்தும் என் குழந்தை  மாமியாரை விட அம்மாவின் அரவணைப்பில்தான் அதிகம் இருந்தது,தன் மகளையும்,பேத்தியையும் எந்த குறையுமில்லாமல் மருமகன் கவனித்துக்கொள்வார் என்பதில்  அம்மாவிற்கு முழு சதவிகித நம்பிக்கை வந்தது.
                    
             குழந்தை தவழ ஆரம்பிப்பதை அம்மா பார்க்கவில்லை,தவழ்ற  குழந்தை தானாக முதல் முறையாக உட்காரந்ததை பார்த்த அம்மாவிற்கு எவ்ளோ சந்தோஷம்,பிறகு நடக்க,பேசுவதற்கு ட்ரைனிங் கொடுப்பாங்க.ஜான்சனன்ட்ஜான்சன் ஆயில்  விளம்பரம் ஒன்றில் அம்மா போன் பேசிக் கொண்டிருக்கும்போது   தன் குழந்தை முதன் முதலாக அடி எடுத்து நடக்க ஆரம்பிப்பதை பார்க்கும் அம்மா மிகவும் ரசித்து மகிழ்வார்,அந்த விளம்பரம்  பார்க்கும்போதுலாம் அம்மா நினைவுதான் வரும்.ஏன்னா ,அந்த விளம்பரத்தில் வரும் அம்மாவின் நடிப்பு மிக நேட்சுரளாக இருக்கும்,என் அம்மாவும் அந்த பொண்ணு நிஜமாகவே சந்தோஷப் படுவது போலவே நடிச்சுருக்கு பாருன்னு சொல்வாங்க..   அம்மா தமிழ் நாட்டிற்கு   போகும்போது எத்தனை பேர் இருந்தாலும் உன் நினைவாகவே இருப்பேன்,இனி என் பேத்தியையும் சேர்த்து நினைத்துகிட்டே இருப்பேனு சொன்னாங்க.நாங்க நல்லபடியாக இருப்போம்,நீ உன் உடல் நலத்தில் கவனம் செலுத்தும்மானு சொல்லி அனுப்பினேன்.